அப்பாடா ஒருவழியா ஜெயிச்சாச்சி. பஞ்சாப் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு ரோஹித் – பேசியது என்ன ?

rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி துவக்கத்திலேயே 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் அவர்களால் பெரிய ரன் குவிப்புக்கு செல்ல முடியவில்லை. இருப்பினும் மார்க்ரம் 42 ரன்கள் மற்றும் தீபக் ஹூடா 28 ரன்கள் குவிக்க அவர்கள் ஓரளவு டீசன்ட்டான ரன் குவிப்பை கொடுத்தனர்.

mivspbks

- Advertisement -

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே அடித்தது. அதன் பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது துவக்கத்தில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தாலும் பின்னர் வந்த நிலைத்து நின்று ஆடிய திவாரி 45 ரன்கள் குவித்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய ஹர்டிக் பண்டியா 30 பந்துகளில் 40 ரன்களும், பொல்லார்டு 7 பந்துகளில் 15 ரன்கள் குவித்து 19வது ஓவரில் மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்த மும்பை அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

pandya

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த வெற்றி குறித்து கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் எங்களுடைய முழு திறனையும் வெளிப்படுத்தவில்லை அதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இருந்தாலும் இது போன்ற நீண்ட தொடருக்கு நிச்சயம் எங்களது திட்டங்களை சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் வகுக்க வேண்டும்.

- Advertisement -

pollard

இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா சூழ்நிலையை உணர்ந்து அதற்கு ஏற்றார் போன்று முக்கியமான தருணத்தில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் மைதானத்தில் நின்று விளையாடுவது அவசியம். காயத்திற்கு பிறகு அவர் வந்து இதுபோன்று விளையாடுவது அணிக்கும் சிறப்பான ஒன்று. இஷான் கிஷனை நீக்கியது ஒரு கடினமான முடிவு தான். இருப்பினும் அவர் நிச்சயம் மீண்டும் வலுவாக திரும்பி வருவார்.

இதையும் படிங்க : தோத்தது மட்டுமில்லாம ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனையும் படைத்த – டெல்லி கேபிட்டல்ஸ்

அதே போன்று இன்றைய போட்டியில் சவுரப் திவாரி மிடில் ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எப்போதுமே மும்பை அணியில் பொல்லார்டு ஒரு கீ பிளேயர் தான். மும்பை அணிக்கு பல ஆண்டுகளாக ஒரு முக்கியமான வீரராக அவர் திகழ்ந்து வருகிறார். இன்றைய போட்டியில் அவர் பந்து வீச்சாளராக “மேன் ஆப் தி மேட்ச்” வாங்கியதில் மகிழ்ச்சியாக இருப்பார் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement