தோத்தது மட்டுமில்லாம ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனையும் படைத்த – டெல்லி கேபிட்டல்ஸ்

dc
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 41-ஆவது லீக் போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு டெல்லி அணி முன்னேறிவிட்டது. ஆனால் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்த கொல்கத்தா இக்கட்டான சூழ்நிலையில் இந்த போட்டியில் மோதியது. முடிவில் கொல்கத்தா அணி இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

kkrvsdc

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக எந்த ஒரு கட்டத்திலும் ரன் குவிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே குவித்தனர். அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 39 ரன்கள் குவித்தனர். மேலும் இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக 14 பவுண்டரிகள் அடிக்கப்பட்டதே தவிர ஒரே ஒரு சிக்ஸர் கூட செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி ஆனது 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா 36 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

smith

இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் டெல்லி அணி படு மோசமான ஒரு சாதனையை ஐ.பி.எல் வரலாற்றில் படைத்துள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் நல்ல ரன் ரேட்டுடன் இருந்த டெல்லி அணியானது நிச்சயம் முதல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு பெரிய ரன் குவிப்புக்கு செல்லும் என்றும் அதிரடியாக சிக்ஸர்களை விளாசி தள்ளுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : வீடியோ : மைதானத்தில் சண்டை போட்ட அஷ்வின் -சவூதி. மோர்கனும் வாய் தகராறு – என்ன நடந்தது ?

ஏனெனில் போட்டி நடைபெறும் ஷார்ஜா மைதானத்தில் எளிதில் சிக்சர்கள் பறக்கும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் இந்த போட்டியில் விளையாடிய டெல்லி அணி வீரர்கள் இறுதி வரை எவ்வளவோ முயன்றும் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி இதுவரை சிக்ஸர் அடிக்காத இரண்டாவது போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement