இவரின் திறமையை நான் பாத்திருக்கேன். ப்ளீஸ் அவரை திட்டாம சப்போர்ட் பண்ணுங்க. நிச்சயம் அசத்துவார் – ரோஹித் நம்பிக்கை

- Advertisement -

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் தள்ளி வைக்கப்பட்டும் இருக்கின்றன. இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்திய வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவ்வபோது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டும் தங்களது மனைவி மற்றும் மகளுடன் இனிமையான நேரத்தை கழித்து வருகின்றனர்.அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடியும் வருகின்றனர்.

Yuvraj 1

- Advertisement -

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் துணை கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குடன் இன்ஸ்டாகிராமில் நேரடியாக உரையாடினார். இந்த நேரத்தில் பல்வேறு முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் யுவராஜ். இந்த கலந்துரையாடலின் போது யுவராஜ் சிங்கிடம் ரோஹித் சர்மா ஒரு கேள்வி கேட்டார். அதாவது தற்போதைய இந்திய அணிக்கும் அவர் விளையாடிய இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த யுவராஜ் சிங் கூறியதாவது :

நான் இந்திய அணிக்குள் வந்தபோது அல்லது நீ (ரோஹித்) இந்திய அணிக்குள் வந்த போதும் நமது சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர். அப்போது சமூக ஊடகங்கள் கிடையாது. இதனால் வீரர்களுக்குக்கு கவன சிதறல்கள் பெரிதாக இல்லை. சீனியர் வீரர்கள் சொல்லிக்கொடுத்த நடத்தையை இளம் வீரர்கள் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டியதாக இருந்தது.

yuvraj

அதாவது பொதுவெளியில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும், ஊடகங்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது போன்ற பல காரியங்களை இளம் வீரராக இருந்த நாம் சீனியர் வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டோம். ஆனால் தற்போது உள்ளது இதற்கு முந்தைய காலத்தில் இருந்த வீரர்களைப் போல் கிடையாது. அதே நேரத்தில் இளம் வீரர்களுக்கு மிகவும் உன்னிப்புடனும் கவனத்துடனும் இருக்க கூற கடமைப்பட்டுள்ளேன். இது மிகவும் அவசியமானதாகும். தற்போது நீயும் விராட் கோலி மற்றும் நீயும்தான் இந்திய அணியில் நிரந்தர வீரர்கள். மற்ற வீரர்கள் நிரந்தரம் என்று கூறமுடியாது.

- Advertisement -

சீனியர் வீரர்களுக்கு அவர்கள் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதை நிலை நிறுத்துங்கள். அதே நேரத்தில் தற்போது சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களுக்கு இடையே ஒரு சிறிய இடைவெளிதான் இருக்கிறது. எதைப்பற்றி வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை வந்துவிட்டது. மிக இளம் வீரர்கள் பலர் சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இதனை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது என்று கூறினார்.

பின்னர் பேசிய ரோகித் சர்மா யுவராஜ்சிங்குடன் இளம் வீரர்களுடன் தனது உறவு குறித்து பேசுகையில் : ரிஷப் பண்ட் குறித்து அதிகமாக பேசினார். அதன்படி அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட்டுடன் நான் அதிக அளவில் பேசுவேன். ஏனெனில் அவருடன் உரையாடுவது எனக்கு பிடிக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவரிடமும் நான் பேசுவதை வழக்கமாக வைத்தாலும் பண்ட்டுடன் அதிகம் கலந்துரையாடுவேன்.

Pant 3

ஏனெனில் அவரைப் பற்றி ஊடகங்கள் தற்போது கண்டபடி எழுதுகிறார்கள். ஆனால் அவர் உழைக்கும் விதம், அவர் பயிர்சி செய்யும் விதம் ஆகியவற்றை நான் பார்த்துள்ளேன். மேலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். நிச்சயம் அவர் வரும் காலத்தில் சிறப்பாக விளையாடுவார் என்று தெரிவித்தார். மேலும் அவரைப் பற்றி கருத்து தெரிவிப்பதை விடுத்து அவருக்கு ஆதரவை தெரிவியுங்கள் என்று ரோஹித் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement