எப்போது மீண்டும் பேட்டை எடுத்து விளையாடப்போறோம்னு வெயிட் பண்ணினு இருக்கேன் – நட்சத்திர வீரர் பேட்டி

Ind
- Advertisement -

கரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக தற்போது உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அடுத்து எப்போது கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகும் என்பதும் தெரியாத விடயமாகி உள்ளது. மேலும் அடுத்ததாக கிரிக்கெட் நடைபெறுவது குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் எந்த ஒரு அணியின் கிரிக்கெட் வாரியமும் வெளியிடவில்லை.

Ipl cup

- Advertisement -

இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் கிரிக்கெட் பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் வீரர்கள் என அனைவரும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் நேரடியாக ரசிகர்களுக்கு பதில் அளிப்பது மட்டுமின்றி ட்விட்டர் வாயிலாகவும் தங்களது கருத்துக்களையும் தங்களது கிரிக்கெட் குறித்து அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் துணை கேப்டனும், அதிரடி துவக்க வீரரான ரோகித் சர்மா அவனிடம் இந்தியா டுடே இணையதளம் நேர்காணல் பேட்டி அளித்துள்ளார். அதில் ரோகித் சர்மா பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

Rohith

அப்போது பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : உலக கோப்பையை வெல்வது அணி வீரர்களின் ஒவ்வொருவரின் கனவு. எனக்கும் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு இருக்கிறது எப்போதெல்லாம் ஆடுகளத்தில் செல்கிறோமோ அப்போதெல்லாம் வென்றாக வேண்டும் ஆனால் உலகக்கோப்பை என்பது அனைத்து போட்டிகளை காட்டிலும் மேலானது. எனவே தான் அதை நான் பெரிதும் விரும்புகிறேன்.

- Advertisement -

அதேபோன்று உலகக்கோப்பை மட்டுமல்ல அனைத்து வகையான உலக கோப்பையும் வெல்ல ஆசைப்படுகிறேன் அதாவது ரோகித் சர்மா இந்த இடத்தில் குறிப்பிட குறிப்பிடுவது 20 ஓவர், 50 ஓவர் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என மூன்றையும் வெல்லவேண்டிய ஆசையை அவரிடம் உள்ளது என்பதே இதன் அர்த்தம். இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை குறித்து பேசுகையில் :

Rohith-3

இப்போது உள்ள சூழ்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் எப்போதும் நடைபெறும் என்று கூறமுடியாது. எனக்கு தெரிந்தவரை அக்டோபரில் தான் டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதனால் போட்டிக்கு தயாராக இருக்கும் நமக்கு நிறைய நேரம் இருக்கிறது என்று ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசிய ரோகித் சர்மா எப்பொழுது நான் களத்தில் இறங்கி விளையாடப் போகிறேன் என்று ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆவலாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement