3 ஆவது டெஸ்ட்டில் இவர் பங்கேற்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. க்ரீன் சிக்னல் காட்டிய நிர்வாகம் – விவரம் இதோ

INDvsAUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரில் பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்பனில் வரும் 26-ம் தேதி துவங்குகிறது. அதேபோன்று 3வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெற இருக்கிறது. அந்த போட்டி அங் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

indvsaus

- Advertisement -

இந்நிலையில் தற்போது சிட்னியில் கொரோனா வைரஸ் தொடர்வது திடீரென அதிகரித்து வருவதன் காரணமாக அந்த மாநிலத்தின் எல்லைகள் மூடப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் சிட்னியிலிருந்து வெளியேறினாலும், சிட்னி நகரில் உள்ள வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா மூன்றாவது டெஸ்டில் பங்கேற்பது சிக்கலாகி உள்ளது.

ஏனெனில் கடந்த 16ஆம் தேதி சிட்னி சென்றடைந்த ரோகித் சர்மா தற்போது 14 நாட்கள் சிட்னி மாநகரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அதன் பிறகு அவர் மூன்றாவது போட்டியில் பங்கேற்பது திட்டமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சிட்னி நகரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடத்த வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. அப்படி சிட்னியில் போட்டி நடைபெற நடைபெறாமல் போனால் அந்த போட்டியில் மெல்போர்ன் அல்லது பிரிஸ்பேன் அல்லது அடிலெய்ட் ஆகிய மூன்று மைதானத்தில் ஏதாவது ஒன்றில் மாற்றப்படும்.

Rohith

அப்படி மாற்றப்படும்போது சிட்னி நகரில் இருக்கும் ரோகித் சர்மா மீண்டும் வெளியேறும்போது 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகி விடும். இதனால் அவர் மூன்றாவது போட்டியிலும் பங்கேற்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்ட் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி மீண்டும் ரோகித் சர்மாவை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்றும் நேரடியாக அவர் இந்திய அணியுடன் இணைய அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் சிட்னியில் போட்டி நடைபெறவில்லை என்றாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் இந்திய அணியுடன் இணைந்து அந்த போட்டியில் விளையாட முடியும் தற்போது ரோகித் சர்மா இரண்டு படுக்கை அறையுடன் கூடிய சிறப்பான வசதி செய்யப்பட்ட ஒரு அறையில் தங்க பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement