3 ஆவது போட்டியில் ரோஹித் விளையாடினாலும் ஓப்பனிங் ஆட வாய்ப்பில்லையாம் – காரணம் இதுதான்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் தற்போது ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் கடைசி இரண்டு போட்டிகள் ஜனவரி 7ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Gill

- Advertisement -

ஏனெனில் இரண்டாவது போட்டியின்போது காயம் அடைந்த உமேஷ் யாதவ்க்கு பதிலாக மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளரை சேர்த்தாக வேண்டும். அதேபோன்று கடந்த இரண்டு போட்டிகளாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்த ரோஹித்துக்கு இடம் கொடுத்தாக வேண்டும். இதனால் நிச்சயம் ஒரு சில மாற்றங்கள் மூன்றாவது போட்டியின் போது இந்திய அணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா மூன்றாவது போட்டியில் விளையாடுவது முற்றிலும் உறுதி ஆனாலும் அவர் எந்த இடத்தில் விளையாடுவார் ? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது இரண்டாவது போட்டியில் சுப்மன் கில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவரை இந்திய அணியின் துவக்க வீரருக்கான இடத்தில இருந்து நீக்க வாய்ப்பில்லை.

Rohith

மேலும் மாயங்க் அகர்வால் சில போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இதற்கு முன்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் அவரை நீக்க வாய்ப்பில்லை ஆனால் மிடில் ஆர்டரில் பின்வரிசையில் இறங்கும் விகாரி கடந்து இரண்டு போட்டிகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவை மிடில் ஆர்டரில் பின்வரிசையில் இறக்க திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

Rohith

ஏனெனில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகும்போது ஆரம்ப காலத்தில் மிடில் ஆர்டரில் பின்வரிசையில் இறங்கி விளையாடி வந்தார். இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் ரோகித் சர்மா விளையாடினாலும் மிடில் ஆர்டரில் பின்வரிசையில் விளையாடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement