மும்பை அணியின் அடுத்த மலிங்கா இவர்தான். ரோஹித் கண்டெடுத்த புதிய நட்சத்திர பவுலர் – விவரம் இதோ

Rohith
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. தற்போது வரை மும்பை அணி மட்டுமே நான்கு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இதுவரை 4 முறை மட்டுமே இறுதிப் போட்டிக்குச் சென்ற இந்த அணி நான்கு முறையும் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு பல வீரர்கள் காரணமாக அமைந்துள்ளனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா பவுலிங்கில் மும்பை அணியை தன்னந்தனியாக நின்று வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். சென்ற வருட இறுதிப் போட்டியில் கூட கடைசி ஓவரில் குறைந்த ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் கூட மிகச் சாதுரியமாக பந்துவீசி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடிக் கொடுத்தார். இதன்மூலம் மும்பை அணி 4 ஆவது கோப்பையை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த வருடம் அவர் ஐபிஎல் தொடரில் ஆட போவதில்லை என்று தெரிவித்து வெளியேறிவிட்டார் சொல்லப்போனால் இனி அவரை ஐபிஎல் தொடரில் ஆட மாட்டார் என்பதுதான் உண்மை. இந்நிலையில் அவருக்கு மாற்றாக ஒரு புதிய வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. மும்பை அணியில் தற்போது பும்ரா, போல்ட், பேட்டின்சன் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஜேம்ஸ் பேட்டின்சன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்த ஆண்டு தான் மும்பை அணியில் அறிமுகமானார். தற்போது வரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டார். இக்கட்டான சூழ்நிலைகளில் சரியாக பந்துவீசி இந்த வருடம் மிகச் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இது குறித்து பேசியுள்ள ஜெயவர்தனே…

pattinson

ஜேம்ஸ் பேட்டின்சன் மும்பை அணிக்கு வரவேண்டும் என்று ரோஹித் சர்மா தான் முடிவெடுத்தார். அவர் தான் அவரை கண்டுபிடித்து எங்களது அணியில் இணைத்தார். இவரே லசித் மலிங்கா இடத்திற்க்கு சரியானவர் என்று தெரிவித்திருக்கிறார் ஜெயவர்த்தனே.

Advertisement