கடைசியா அந்த கோப்பையையும் என் அலமாரியில் அடுக்கிட்டு தான் மொத்தமாக ரிட்டையராவேன்.. ரோஹித் உறுதி

Rohit Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2007ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் டி20 உலகக் கோப்பை வெற்றியில் தம்முடைய பங்காற்றினார். இருப்பினும் ஆரம்பக் காலங்களில் மிடில் ஆடரில் தடுமாற்றமாக விளையாடிய அவர் 2011 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெறவில்லை.

ஆனால் அவருடைய திறமையை அறிந்த அப்போதைய கேப்டன் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் துவக்க வீரராக அறிமுகப்படுத்தினார். அந்த வாய்ப்பில் சொல்லி அடித்த ரோஹித் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி நாளடைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்தார். அதற்கிடையே 2013ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி தடுமாறிய ரோஹித் 2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார்.

- Advertisement -

டெஸ்டில் ஓய்வு:

அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் அசத்திய அவர் 2021 லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் சதத்தை அடித்து வெற்றி பெற உதவினார். அதற்கிடையே ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றதால் இந்தியாவின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு ரோஹித் சர்மாவுக்கு கிடைத்தது.

அந்த வாய்ப்பில் 2023 உலகக் கோப்பையில் இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற அவர் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவரது தலைமையில் கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமான தோல்விகளை சந்தித்தது. அதனால் விமர்சனங்களை சந்தித்த ரோஹித் சர்மா தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

கடைசி இலக்கு:

இருப்பினும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று சாதனைப் படைத்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் 2023இல் தவறிய ஒருநாள் உலகக் கோப்பையை 2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வெள்ள விரும்புவதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதன் பின்பே சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக ஓய்வு பெறுவேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: தோனியின் மீதுள்ள விசுவாசத்தை காட்டும் வகையில் ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவில் செய்த செயல் – என்ன தெரியுமா?

“கண்டிப்பாக 2027 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது பற்றிய கனவு என்னுடைய மனதில் இருக்கிறது. ஒருநாள் உலகக் கோப்பையை வென்று என்னுடைய அலமாரியில் சேர்ப்பது மிகவும் சிறப்புமானதாக இருக்கும். அப்படி நடந்தால் அது எனது கேரியரில் மகத்தான விஷயமாக இருக்கும்” என்று விமல் குமார் யூடியூப் சேனலில் கூறினார்.

Advertisement