230 ரன்கள் கூட அடிக்க முடியாமல் இந்திய அணியிடம் நாங்க தோக்க இதுவே காரணம் – ஜாஸ் பட்லர் வருத்தம்

Jos-Buttler
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் போட்டியானது இன்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலபரீட்சை நடத்தின. அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை மட்டுமே குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 87 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 49 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது எளிதில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது ஆறாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியல் முதல் இடத்திற்கு சென்றது.

அதே வேளையில் இங்கிலாந்து அணி தங்களது ஐந்தாவது தோல்வியை பதிவு செய்து கடைசி இடத்திற்கு சென்றதுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த தோல்வியும் எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த போட்டியின் பாதியில் நாங்கள் 230 ரன்களை சேசிங் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டோம்.

- Advertisement -

ஆனாலும் பழையபடி அதே கதை தான் இந்த போட்டியிலும் நடந்திருக்கிறது. இந்த போட்டியில் டியூ வருமா வராதா என்று தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் இலக்கை சரியாக துரத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இன்றும் எங்களால் பெரிய பாட்னர்ஷிப்பை அமைக்க முடியாமல் சேசிங் செய்ய முடியாமல் போனது. இந்த போட்டியில் முதலில் பந்துவீசி மிகச் சிறப்பாக இந்திய அணியை குறைவான ரன்களில் நிறுத்தினோம். 230 ரன்கள் இலக்கு என்று இருந்தபோது போது சற்று மகிழ்ச்சியாக தான் இருந்தது.

இதையும் படிங்க : 100இல் 100.. அனல் தெறித்த பவுலிங்.. இங்கிலாந்தை 10 வருடங்கள் கழித்து வீழ்த்திய இந்தியா.. மாஸ் வெற்றி

ஆனாலும் பேட்டிங்கில் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை இந்த போட்டியிலும் வெளிப்படுத்த தவறி உள்ளோம். இந்த போட்டியில் பெரிய இலக்கு என்கிற அழுத்தம் எல்லாம் கிடையாது. ஆனாலும் நாங்கள் தவறுகளை செய்து தோல்வியை சந்தித்துள்ளோம். ஒட்டுமொத்தமாகவே எங்களுடைய சிறந்த ஆட்டத்தின் பகுதி அளவை கூட இந்த போட்டியிலும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை. எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய வழியை விரைவில் கண்டுபிடித்தாக வேண்டும். இந்த போட்டியிலும் நாங்கள் எங்களுடைய திறனுக்கு ஏற்ப விளையாடவில்லை தோல்வியை சந்தித்துள்ளோம் என பட்லர் வருத்தத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement