அந்த 2 பேர் கூட நான் ஹோட்டல் ரூம் ஷேர் பண்ணமாட்டேன்.. எனக்கு செட் ஆகாது – ரோஹித் சர்மா ஓபன்டாக்

Rohit
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சலசலப்புகள் மும்பை அணியில் நீடித்து வருகின்றன. மேலும் கேப்டன் பதிவிலிருந்து வெளியேறிய ரோகித் சர்மா தற்போது நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஒரு சாதாரண வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்பட்ட இந்த கேப்டன்சி மாற்றத்தினால் ரோகித் சர்மா மற்றும் பாண்டியா ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவதாகவும் அதனால் அணியில் ஒற்றுமை இல்லாத சூழல் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

- Advertisement -

மேலும் மைதானத்தில் ரோகித் சர்மாவை ஹார்டிக் பாண்டியா மரியாதை இன்றி வழிநடத்துவதால் ஒரு கடுமையான சூழ்நிலையில் ரோகித் சர்மா விளையாடி வருகிறார் என்றும் முடிந்தவரை மற்ற வீரர்களுடன் ஜாலியாக இருக்கும் ரோஹித் பாண்டியாவுடன் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை என்ற ஒரு சில கருத்துக்களும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டு வீரர்களுடன் ஹோட்டல் அறையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இப்போது எல்லாம் அனைவருக்கும் தனித்தனியாக அறை கிடைக்கிறது.

- Advertisement -

ஒருவேளை எனக்கு ஒரு தனி அறையை மற்ற வீரர்களுடன் பகிர வாய்ப்பு கிடைத்தால் இரண்டு வீரர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டேன். அவர்கள் வேறு யாருமில்லை : ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர்தான். அவர்கள் மிகவும் குளறும்படியானவர்கள் என்று கலகலப்பாக பேசினார்.

இதையும் படிங்க : இந்திய ரசிகர்கள் அப்படி செய்வாங்கன்னு எதிர்பாக்கல.. கோலியின் உதவியை வெளிய சொல்ல முடியாது.. பாபர் நெகிழ்ச்சி

மேலும் தொடர்ந்து பேசி அவர் : தவான் மற்றும் பண்ட் ஆகிய இருவரும் பயிற்சிக்கு பிறகு தங்களது ஆடைகளை படுக்கையிலேயே தூக்கி எறிந்து விடுவார்கள். அதுமட்டும் இன்றி மதியம் ஒரு மணி வரை தூங்குவார்கள். எனவே அவர்களது அறை எப்போதும் கலைந்தே தான் இருக்கும் அதனால்தான் அவர்களுடன் நான் அறையை பகிர மாட்டேன் என்று ரோஹித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement