என்னோட 86 ரன் இல்ல.. பாகிஸ்தானை தோற்கடிக்க அவங்க தான் காரணம்.. கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

Rohit Sharma Press 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தனர். மறுபுறம் ஒரு கட்டத்தில் 155/2 என்ற வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தானை அடுத்த 80 பந்துகளில் 36 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி மொத்தமாக சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

ரோஹித் பாராட்டு:
அதை தொடர்ந்து 192 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அதிரடியாக விளையாடிய 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 86 (63) ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கி ஆட்டமிழந்தார். அவருடன் சுப்மன் கில் 16, விராட் கோலி 16, ஸ்ரேயாஸ் ஐயர் 53*, ராகுல் 19* ரன்கள் எடுத்ததால் 30.3 ஓவரிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதான வெற்றி பெற்று 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

அதனால் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 2 விக்கெட்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. அதை விட கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தங்களுடைய கௌரவத்தை தக்க வைத்து அசத்தியது. இந்நிலையில் 86 ரன்கள் அடுத்த தாம் கேப்டனுக்கான வேலையை மட்டுமே செய்ததாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா குறைந்தது 280 ரன்கள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானை 190க்கு சுருட்டிய தங்களின் பவுலர்கள் தான் வெற்றிக்கு காரணம் என்று மனதார பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுக்கு இன்றைய போட்டியை பவுலர்கள் தான் பெற்றுக் கொடுத்தனர். ஏனெனில் இது வெறும் 190 ரன்கள் எடுக்கும் பிட்ச் கிடையாது. ஒரு கட்டத்தில் நிதானத்தை காட்டிய பாகிஸ்தான் 280 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்களை சுருட்டியதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். குறிப்பாக வாய்ப்பு பெற்ற எங்களுடைய அனைத்து பவுலர்களும் சிறப்பாக வேலையை செய்தனர்”

இதையும் படிங்க: 117 பந்துகள் மீதம்.. 8 – 0 என எழுதப்பட்ட வரலாறு.. பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய ஹிட்மேனின் இந்தியா

“கேப்டனாக பிட்ச் சூழ்நிலைகளை படிப்பது, யாரை தேர்ந்தெடுப்பது என்பது போன்ற என்னுடைய வேலையும் முக்கியம் தான். ஆனால் சிறப்பாக விளையாடி இந்த உலகக் கோப்பை அணியில் தேர்வான வீரர்கள் தான் அனைத்திற்கும் முக்கியமானவர்கள். நாங்கள் இரு மனதுடன் அல்லாமல் மகிழ்ச்சியாகவும் சோர்வாகவும் இல்லாமல் சமநிலையுடன் இருக்க விரும்புகிறோம். மேலும் எங்களுக்கு எதிரான அனைத்து எதிரணிகளும் தரமானவை என்பதால் போட்டி நாளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை நோக்கி செல்கிறோம்” என்று கூறினார்.

Advertisement