ரோஹித் சர்மா அதை விரும்பல.. நாங்க தான் வற்புறுத்தி செஞ்சோம்.. இப்போ ரிசல்ட்டை பாருங்க.. கங்குலி மகிழ்ச்சி

Sourav Ganguly 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற அசத்தி வருகிறது. மேலும் தற்போதைய அணியில் விராட் கோலி முதல் ஷமி வரை அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருப்பதால் 2011 போல கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெற்றிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் வேலைகளை மிகச் சிறப்பாக செய்து பேட்ஸ்மேனாக துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி முக்கிய பங்காற்றி வருகிறார் என்றே சொல்லலாம். முன்னதாக 2017 முதல் 3 விதமான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி இருதரப்பு தொடர்களில் வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தும் உலகக்கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதால் விமர்சனத்திற்கு உள்ளானார்.

- Advertisement -

ரிசல்ட்டை பாருங்க:
அதனால் டி20 கேப்டன்ஷிப் பதவியை மட்டும் ராஜினாமா செய்த அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார். அப்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்று கருதிய அப்போதைய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா ஆகியோர் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை பறித்தனர்.

அதன் காரணமாக மனமுடைந்த விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியைவையும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் மிகுந்த ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட ரோகித் சர்மா விரும்பவில்லை என்று சௌரவ் கங்குலி எடுத்துள்ளார். இருப்பினும் விராட் கோலி விலகியதன் காரணமாக வேறு வழியின்றி தாங்கள் தான் அந்த பொறுப்பை ரோஹித்திடம் கொடுத்ததாக அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி தற்போது கூறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் தங்களுடைய நம்பிக்கை வீணாகாத வகையில் தற்போது ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு தொடர் வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதை நீங்களே பாருங்கள் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. ஏனெனில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்படுவது ஏராளமான அழுத்தத்தை கொடுக்கும்”

இதையும் படிங்க: பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க.. மன்னிச்சுடுங்க ஸ்ரீலங்கா.. பாகிஸ்தானை ஓப்பானாக கலாய்த்த சேவாக்

“ஆனால் ஒரு கட்டத்தில் நீங்கள் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்பதற்கு சம்மதம் தெரிவியுங்கள் இல்லையென்றால் நான் உங்களுடைய பெயரை கேப்டனாக அறிவிப்பேன் என்று ரோஹித் சர்மாவிடம் சொல்ல வேண்டிய நிலைமைக்கு நான் தள்ளப்பட்டேன். அந்த வகையில் என்னுடைய பேச்சை கேட்ட அவர் தற்போது இந்தியாவை முன் னின்று வழி நடத்துவதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய செயல்பாடுகள் மற்றும் வெற்றி முடிவுகளை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்” என்று கூறினார்.

Advertisement