2024 டி20 உலகக் கோப்பையில் தோனி – டிகே ஆகியோரில் யாரை விளையாட வைப்பீங்க.. கேப்டன் ரோஹித் பதில்

Rohit Sharma 2.jpeg
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் இருக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஃபினிஷர்களாக ஜாம்பவான் எம்எஸ் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக 42 வயதாகும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி டெல்லிக்கு எதிராக 36* (17) ரன்கள் அடித்து அசத்தினார். அதை விட மும்பைக்கு எதிராக கடைசி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ரோஹித் கருத்து:
மறுபுறம் 38 வயதில் பெங்களூரு அணிக்காக எதிரணிகளை சொல்லி அடிக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 226 ரன்களை 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். அதனால் மும்பைக்கு எதிரான போட்டியில் “உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காகவே எங்களை இப்படி அடிக்கிறீர்களா” என்று ரோகித் சர்மா அவரைப் பாராட்டியது வைரலானது.

இந்நிலையில் 2024 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாரை விளையாட வைக்க விரும்புவீர்கள் என்று கேப்டன் ரோஹித் சர்மாவிடம் சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் ஜாலியாக கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா பதிலளிப்பது பின்வருமாறு. “அவர்களுடைய ஆட்டம் என்னை கவர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார்”

- Advertisement -

“தோனியும் 4 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் எடுத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். கடைசியில் அந்த ரன்கள் தான் வெற்றியின் வித்தியாசமாக இருந்தது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் செல்வதற்கு எம்எஸ் தோனியை சம்மதிக்க வைப்பது கடினமாகும். மிகவும் கலைப்படைந்து உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவர் அமெரிக்காவுக்கு கோல்ஃப் விளையாடுவதற்காக வருவார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: 90 ரன்தான் டார்கெட்ன்னு தெரிஞ்சதும் நாங்க பண்ண முடிவு இதுதான்.. வெற்றி குறித்து பேசிய – குஜராத் கேப்டன் சுப்மன் கில்

“ஆனால் தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது மிகவும் எளிது. இந்தியாவுக்கு விளையாட நானும் அவர் மீது கொஞ்சம் அழுத்தத்தை கொடுத்து வருகிறேன். ஹைதராபாத் போட்டியின் முடிவில் அதைப்பற்றி அவரும் பேசினார்” என்று கூறினார். முன்னதாக தோனி 2019லயே ஓய்வு பெற்று விட்டதால் இந்தியாவுக்கு மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பில்லை. அதே போல 2022 டி20 உலகக் கோப்பையில் அசத்த தவறியதால் தினேஷ் கார்த்திக் மீண்டும் தேர்வு செய்யப்படுவாரா என்பதும் கேள்விக்குறியாகும்.

Advertisement