ரோஹித் முடிவு.. மும்பை இந்தியன்ஸ் அணியில் யாருமே நினைக்காத ஒன்னு நடக்கப்போகுது.. ஏபிடி கருத்து

Ab De Villiers.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாகவே அனைத்து அணிகளும் தாங்கள் விடுவிக்க நினைக்கும் வீரர்களை கழற்றி விட்டு விரும்பும் வீரர்களை மற்ற அணியிடமிருந்து டிரேடிங் முறையில் வாங்கி வருகின்றன. அந்த வரிசையில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட உள்ளார் என்ற செய்தி மொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2016ஆம் ஆண்டு தோனி தலைமையில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதில் கபில் தேவுக்கு பின் தரமான ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு அசத்திய அவர் நாளடைவில் காயத்தால் தடுமாறி 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்டார்.

- Advertisement -

ஏபிடி கருத்து:
அதன் காரணமாக 2022 சீசனில் மும்பை தக்க வைக்க தவறிய ஹர்திக் பாண்டியாவை 15 கோடிக்கு வாங்கிய குஜராத் தங்களுடைய கேப்டனாக நியமித்தது. அதில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்திய பாண்டியா முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்து 2023 சீசனிலும் குஜராத்தை ஃபைனல் வரை அழைத்து சென்றார். அதன் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித்தை மிஞ்சி இந்தியாவின் அடுத்த கேப்டனாகும் அளவுக்கு பாண்டியா முன்னேறியுள்ளார்.

அப்படிப்பட்ட மதிப்பு மிகுந்த பாண்டியாவை குஜராத் எதன் அடிப்படையில் விடுவிக்கிறது? என்ற குழப்பமும் ஏற்கனவே ரோகித் சர்மா இருக்கும் போது அவரை ஏன் மும்பை வாங்குகிறது? என்ற கேள்வியும் தற்போது ரசிகர்களிடம் உச்சகட்டமாக காணப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் ரோஹித் சர்மா யாருமே எதிர்பாராத வகையில் தம்முடைய மும்பை அணியின் கேப்டன்ஷிப் பதவியை ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுப்பார் என்று கருதுவதாக ஏபி டீ வில்லியர்ஸ் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதற்கான காரணத்தை விளக்கி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக செயல்பட விடுவார் என்ற வேடிக்கையான உணர்வு எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் ரோகித் சர்மா ஏற்கனவே இந்திய அணியை கேப்டன்ஷிப் செய்வதில் நிறைய அழுத்தங்களை சந்தித்துள்ளார். அதனால் இந்த நகர்வு எடுக்கப்பட்டிருக்கலாம்”

இதையும் படிங்க: கோலி ஓகே தான்.. ஆனா ரோஹித் சர்மா இதை பண்ணா மட்டும் தான் டி20 வேர்லடுகப் ஆடமுடியும் – முரளிதரன் கருத்து

“இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய செய்தியாகும். பாண்டியா அவர்களின் முக்கிய வீரராக நீண்ட வருடங்களாக செயல்பட்டார். அவர் வான்கடே மைதானத்தில் விளையாடுவதை விரும்புகிறார். அதே சமயம் குஜராத் அணிக்கு முதல் வருடத்தில் கோப்பையை வென்று கொடுத்த அவர் அடுத்த வருடத்தில் ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். ஒருவேளை அந்த அணியில் நமக்கான நேரம் முடிந்ததாக பாண்டியா உணரலாம்” என்று கூறினார்.

Advertisement