கோலி ஓகே தான்.. ஆனா ரோஹித் சர்மா இதை பண்ணா மட்டும் தான் டி20 வேர்லடுகப் ஆடமுடியும் – முரளிதரன் கருத்து

Muralitharan
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான வீரர்களை தேர்வு செய்ய முக்கியமான தொடராக பார்க்கப்படுவதால் இந்த தொடரில் அனைத்து வீரர்களின் செயல்பாடும் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு 2024-ல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் டி20 உலக கோப்பை நடைபெறும் போது அதில் சீனியர் வீரர்களான விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் பங்கேற்பார்களா? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் தற்போது சீனியர் வீரர்களான அவர்கள் உலகக்கோப்பை முடிந்த கையோடு ஓய்வளிக்கப்பட்டு டி20 அணியில் தேர்வு செய்யப்படாத வேளையில் அவர்கள் இனியும் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் கூறுகையில் :

ரோகித் சர்மாவின் பேட்டிங் நடைபெற்று முடிந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக இருந்தது. அவர் இந்த தொடர் முழுவதுமே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். டி20 கிரிக்கெட்க்கும் போதுமான ஆட்டத்தை ரோகித் சர்மா வைத்துள்ளார். இருப்பினும் விராட் கோலியை போன்று உடற்ககுதியை சரியாக வைத்திருந்தால் மட்டுமே அவரால் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட முடியும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் விராட் கோலி இன்றளவும் மிகவும் பிட்டாக துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் நினைத்தால் நிச்சயம் டி20 உலக கோப்பையில் விளையாடலாம். அதேபோன்று ரோகித் சர்மா சற்று உடல் தகுதியை மேம்படுத்தினால் மட்டுமே இளம் வீரர்களுடன் அவரால் போட்டி போட முடியும்.

இதையும் படிங்க : வாழ்வா – சாவான்னு ஆடிருக்கணும்.. ஃபைனலில் இந்திய அணியின் முக்கிய தவறை சுட்டிக்காட்டிய வாசிம் அக்ரம்

என்னதான் அவர் அதிரடியாக விளையாடி வந்தாலும் இளம் வீரர்களுடன் அணியில் இருக்கும் போது அவர்களுக்கு ஈடாக நிச்சயம் ரோஹித் சர்மா தனது செயல்பாட்டை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த உலகக் கோப்பையில் அவரால் விளையாட முடியும் என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா தனது அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement