ஆசிய கோப்பையில் வேறு யாருமே படைக்காத சாதனை.. இந்தியாவின் கேப்டனாக 3 சரித்திரம் படைத்த ரோஹித் சர்மா

Rohit Sharma
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அதில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்தி வந்த நடப்பு சாம்பியன் இலங்கையை ஃபைனலில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா கோப்பையை வென்று புதிய ஆசிய சாம்பியனாக சாதனை படைத்தது. செப்டம்பர் 17ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற இத்தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அனலான இந்தியாவின் பந்து வீச்சில் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் 17 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகமாக முகமது சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தார். அதை துரத்திய இந்தியாவுக்கு இசான் கிசான் 23* ரன்களும் சுப்மன் கில் 27* ரன்களும் விளாசி 6.1 ஓவரிலேயே விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று கொடுத்தனர். அதனால் 8வது முறையாக கோப்பையை வென்ற இந்தியா ஆசிய கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது.

- Advertisement -

ரோஹித்தின் சாதனைகள்:
1. முன்னதாக 2008ஆம் ஆண்டு முதல் முறையாக ஆசிய கோப்பையில் விளையாடிய ரோகித் சர்மா அதன் பின் 2010, 2016 ஆகிய தொடர்களிலும் விளையாடினார். மேலும் 2018 ஆசிய கோப்பையை கேப்டனாக வென்ற அவர் தொடரையும் கேப்டனாக வென்றுள்ளார். அந்த வகையில் 2008, 2010, 2016, 2018, 2023* ஆகிய 5 தொடர்களில் விளையாடியுள்ள அவர் வரலாற்றில் அதிக ஆசிய கோப்பைகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சச்சின், தோனி உட்பட வேறு யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.

2. அதே போல ஆசிய கோப்பை வரலாற்றில் 2 சாம்பியன் பட்டங்களை (2018, 2023) வென்ற இந்திய கேப்டன் என்ற முகமது அசாருதீன் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரது சாதனைகளையும் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

- Advertisement -

3. அத்துடன் 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் ரோஹித் தலைமையில் 10 விக்கெட் வித்யாசத்தில் வென்ற இந்தியா இந்த தொடரில் நேபாளுக்கு எதிரான போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த நிலையில் நேற்று 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை 10 வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற யாராலும் தொட முடியாத சாதனை ரோகித் படைத்துள்ளார்.

ஏனெனில் இதற்கு முன் சீனிவாசன் வெங்கட்ராகவன், சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், தோனி, கேஎல் ராகுல் ஆகியோர் தலைமையில் தலா 1 முறை மட்டுமே 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.

இதையும் படிங்க: நேத்து நான் ஓப்பனிங் ஆட காரணமே அவர்தான்.. ஆனா ஆஸ்திரேலிய சீரிஸ்ல மிடில் ஆர்டர் தான் – இஷான் கிஷன் பேட்டி

4. இது போக கடந்த ஜனவரியில் இதே இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 317 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் தலைமையில் வென்ற இந்தியா நேற்று 6.1 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து வென்றது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் (317) வித்தியாசத்திலும் அதிக பந்துகள் (263) வித்தியாசத்திலும் அதிவேகத்தில் சேசிங் செய்தும் (6.1 ஓவர்களில்) வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற 3 சரித்திரத்தையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

Advertisement