கட்டியணைக்க வந்த ஹார்டிக் பாண்டியா.. தட்டி உதறிவிட்ட ரோஹித் சர்மா – போட்டிக்கு பின் நடந்தது என்ன?

Rohit
- Advertisement -

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலத்திற்கு முன்பாகவே குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹார்டிக் பாண்டியாவை விலைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் அறிவித்தது. அப்படி அறிவிப்பு வெளியானதிலிருந்தே அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் ரோகித்துக்கு ஆதரவாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறியும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். அதோடு ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை எப்படி பாண்டியாவின் தலைமையின் கீழ் விளையாட வைக்கலாம் என்று கேள்விகளையும் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி பல்வேறு சம்பவங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் நடைபெற்று வரும் வேளையில் நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது ஹார்டிக் பாண்டியா கேப்டனாக அணியை வழிநடத்திய வேளையில் ரோகித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு அனுப்பி பீல்டிங் செய்ய நிற்க வைத்தது ரசிகர்களை மேலும் எரிச்சலூட்டியுள்ளது.

அதோடு அவரின் ஆலோசனைகளை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தது என ஏகப்பட்ட விடயங்கள் மைதானத்தில் அரங்கேறின. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்த பிறகு நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது மீண்டும் பெரியளவில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

- Advertisement -

அதாவது நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி 168 ரன்களை குவிக்க 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது இறுதிவரை போராடி 162 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து மைதானத்தில் இருந்து வீரர்கள் வெளியேறுவதற்கு முன்னதாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க : அடிக்க வேண்டிய இலக்கை அடிக்க முடியாம நாங்க தோக்க இதுவே காரணம் – ஹார்டிக் பாண்டியா பேட்டி

அப்போது ஹார்டிக் பாண்டியா பின்னால் இருந்து ரோஹித் சர்மாவை கட்டியணைக்க முயன்றார். அப்போது ரோகித் சர்மா அவரது கையை தட்டி விட்டு காரசாரமான ஏதோ ஒரு சம்பவத்தை பற்றி தனது கருத்தினை பேசினார். இப்படி ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement