டி20 கிரிக்கெட்டிற்கு இந்த ரூல்ஸ் செட்டே ஆகாது.. எனக்கு சுத்தமா அது பிடிக்கல – ரோஹித் சர்மா வெளிப்படை

Rohit
- Advertisement -

கடந்த ஆண்டு 2023-இல் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது இம்பேக்ட் பிளேயர் விதிமுறை கொண்டுவரப்பட்டதன் மூலமாக ஐபிஎல் தொடர் மேலும் சுவாரஸ்யத்தை எட்டியது. அந்த விதிமுறையானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து வரும் வேளையில் இந்த தொடரிலும் போட்டிகளின் முடிவு இம்பேக்ட் பிளேயர் மூலமாக தீர்மானமாகி வருகிறது.

இந்த இம்பேக்ட் பிளேயர் மூலம் இந்த தொடரில் விளையாடும் அணிகளுக்கு கூடுதல் சாதகமும் கிடைத்து வருகிறது. அதாவது வழக்கமாக பங்குபெறும் 11 வீரர்களை தவிர்த்து கூடுதலாக 5 வீரர்களை டாசின் போதே கேப்டன் இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் அறிவிக்கலாம். அப்படி அறிவிக்கப்படும் அந்த ஐந்து பேர்களில் ஒருவர் பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலராகவோ களமிறங்க முடியும்.

- Advertisement -

அப்படி இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் வீரர் பவுலராக இருந்தால் நான்கு ஓவர்களை வீசலாம். அதேபோன்று பேட்ஸ்மேனாக இருந்தால் முழுவதுமாக பேட்டிங்கும் விளையாடலாம். இப்படி இம்பேக்ட் பிளேயர் விதிமுறை வந்ததிலிருந்து வெற்றிகளும் அதன் மூலமாக தீர்மானம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த புதிய விதிமுறையானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் விளையாடும் அணியின் கேப்டன்களுக்கு சற்று சிரமத்தையே அளித்துள்ளது. இந்நிலையில் இந்த விதிமுறையில் தனக்கு அதிருப்தி இருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ள ரோஹித் சர்மா இதுகுறித்து கூறுகையில் :

- Advertisement -

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் இம்பேக்ட் வீரர் என்ற விதிமுறையின் ரசிகன் இல்லை. ஏனெனில் இந்த விதிமுறையினால் நமது அணியின் ஆல்ரவுண்டர்களை நாம் சரியாக பயன்படுத்த முடியாது என்று நினைக்கிறேன். ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் பந்து வீசாதது நமக்கு நல்லதல்ல. ஆல்ரவுண்டர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் எனில் அவர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்பட்டு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே கிடைக்க வேண்டும்.

இதையும் படிங்க : அதுக்குள்ள ரிஷப் பண்ட் ரெடியாகிடுவாரு.. இனிமேலும் நீங்க யோசிக்க ஒன்னுமில்ல.. கெவின் பீட்டர்சன் கருத்து

ஆனால் இன்பேக்ட் விதிமுறையின் மூலம் ஆல் ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போவதாக உணர்கிறேன். எனவே என்னை பொறுத்தவரை இம்பேக்ட் பிளேயர் விதிமுறை தேவையற்ற ஒன்று. அதே நேரத்தில் ஆல் ரவுண்டர்களின் தாக்கம் உலக அளவில் அதிகமாகி உள்ள வேளையில் இந்திய ஆல்ரவுண்டர்கள் இம்பேக்ட் விதிமுறையினால் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ளது என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement