ஆமா ரோஹித் தான் அந்த சதியை பண்ணாரு.. பாகிஸ்தானை கலாய்த்த வாகன்.. சிரித்த கில்கிறிஸ்ட்

Micheal Vaughan 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 20ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியிலிருந்து மீளாத பாகிஸ்தான் முக்கிய கேட்ச்களை கோட்டை விட்டு அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்து மீண்டும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

முன்னதாக அகமதாபாத் நகரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 154/2 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற பாகிஸ்தான் அதன் பின் இந்தியாவின் நெருப்பான பந்து வீச்சில் சீட்டுக்கட்டு போல சரிந்து 191 ரன்களுக்கு படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் சொன்ன காரணம் இப்போது வரை சர்ச்சையாகவும் சிரிப்பை ஏற்படுத்துவதாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

கலாய்த்த வாகன்:
அதாவது இந்தியா அசத்திய தருணங்களில் “சக்தே இந்தியா” எனும் உத்வேக பாடல் அகமதாபாத் மைதானத்தில் ஒலிபரப்பப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அசத்திய தருணங்களில் “தில்தில் பாகிஸ்தான்” பாடல் ஒலிபரப்பப்படவில்லை என்று விமர்சித்த அவர் இது ஐசிசிக்கு பதிலாக பிசிசிஐ நடத்தும் இருதரப்பு தொடரை போல் இருப்பதாக தெரிவித்திருந்தார். எனவே அந்த உத்வேகம் இல்லாதது தோல்வியில் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்த அவர் இவை அனைத்திற்கும் ஃபைனலுக்கு வந்து பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் அப்போட்டியில் பாகிஸ்தானின் பாடலை ஒலிபரப்ப வேண்டாம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தான் சொல்லி தோல்வியை பரிசளித்ததாக மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார். அதாவது கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற வகையில் பாடல் ஒலிபரப்பாததால் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்ததாக தெரிவித்த மிக்கி ஆர்தரை மறைமுகமாக கிண்டலடித்த அவர் இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் ஆடம் கில்கிறிஸ்டுடன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கில்லி ரோஹித் பற்றி நீங்கள் சொன்னது சரியானது. குறிப்பாக களத்தில் வீரர்களை சரியாக கையாள்வதிலும் நீங்கள் சொன்னது போல் சிராஜுக்கு எக்ஸ்ட்ரா ஓவர் கொடுத்ததிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் பாகிஸ்தான் பயிற்சியாளர் விமர்சிக்கும் அளவுக்கு “தில்தில் பாகிஸ்தான்” பாடலை ஒலிபரப்ப வேண்டாம் என்று டிஜேவிடம் சொன்னதே கொஞ்சமும் சந்தேகமின்றி ரோகித் சர்மாவின் சிறந்த கேப்டன்ஷிப் நகர்வாகும்”

இதையும் படிங்க: இந்தியா – நியூசிலாந்து போட்டி நடைபெறும் தரம்சாலா மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“அதாவது நீங்கள் அந்தப் பாடலை ஒளிபரப்பினால் பாகிஸ்தான் வெல்லும். அதனால் பாகிஸ்தானை தோற்கடிக்க அந்த பாடலை ஒலிபரப்பாதீர்கள். குறிப்பாக அந்த உத்வேகம் தரும் பாடலை பாகிஸ்தான் அணியினர் கேட்காமல் களத்தில் விளையாடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது ரோகித் சர்மா செய்த புத்திசாலித்தனமான நகர்வாகும். பொதுவாக பெரும்பாலான கேப்டன்கள் டிஜேக்கள், இசை போன்ற விஷயங்களை பற்றி யோசிப்பதில்லை. ஆனால் ரோஹித் அந்த விஷயத்திலும் மற்றவர்களை முன்னிலையில் இருக்கிறார்” என்று சொன்னதை கேட்டு கில்கிறிஸ்ட் சிரித்தார்.

Advertisement