இவரை டீம்ல சேத்தத்துக்கு அவரே இருந்திருக்கலாம். தோனியின் முடிவால் – அதிருப்தியில் ரசிகர்கள்

PBKSvsCSK
- Advertisement -

கடந்த ஆண்டு பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணியானது இம்முறை பலமாக மீண்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரின் முதலாவது அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணியானது அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வந்த நிலையில் கடந்த சில போட்டிகளாக தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் சென்னை அணியின் துவக்க வீரர்கள் டு பிளிசிஸ் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் ஆட்டமிழந்தால் மிடில் ஆர்டரில் பெரிய அளவு ரன்கள் வருவது கிடையாது என்ற பலவீனம் அனைத்து அணைகளுக்கும் தெரிந்திருக்கிறது.

ruturaj

- Advertisement -

அதன்படியே கடந்த சில போட்டிகளாகவே சென்னை அணியின் மிடில் ஆர்டரில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் அணியில் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா சரிவர விளையாடாததால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா கடந்த போட்டியில் சேர்க்கப்பட்டார். ஆனால் எதிர்பார்த்தது போல அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

கடைசியாக நடைபெற்ற போட்டியில் 19 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே அடித்திருந்த ராபின் உத்தப்பா தற்போது பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் போட்டியில் கூட 6 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். தற்போது முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

uthappa

இந்நிலையில் தோனியின் இந்த முடிவால் ரசிகர்கள் தற்போது தங்களது அதிருப்தியை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சுரேஷ் ரெய்னாவை அணியில் இருந்து நீக்குவதற்கு பதிலாக அவரே தொடர்ந்து விளையாட வைத்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர். ஏனெனில் அவருக்கு பதிலாக இடம்பெற்ற உத்தப்பா அவரை விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இதற்கு ரெய்னாவே மேல் என்பது போன்ற கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவேனா ? – டாஸிற்கு பிறகு தோனி கூறியது என்ன ?

ஆனாலும் இவர்கள் இருவரையும் தாண்டி தமிழக வீரர்களான ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் நல்ல திறமையுடன் டி.என்.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதன் காரணமாக அவர்களுக்கு வாய்ப்பு அளித்து இருக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement