பாவம் 27 கோடிக்கு குழம்பிட்டாரு.. ரிஷப் பண்ட் 2024 டி20 உ.கோ அசத்தல் இடத்தில் விளையாடுனும்.. உத்தப்பா அறிவுரை

Robin Uthappa
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தொடரில் லக்னோ அணி 11 போட்டிகளில் 5 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் தடுமாறி வருகிறது. அந்தத் தடுமாற்றமான ஆட்டத்திற்கு கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மோசமாக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த வருடம் 27 கோடி என்ற வரலாறு காணாத தொகை வாங்கப்பட்ட அவர் லக்னோ கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த வாய்ப்பில் விக்கெட் கீப்பிங் செய்வதில் தடுமாறும் அவர் கேப்டனாகவும் முக்கிய முடிவுகளை சரியாக எடுப்பதில்லை. குறிப்பாக பேட்டிங் துறையில் தாம் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் என்பதே அவருக்கு தெரியவில்லை என்று சொல்லலாம்.

- Advertisement -

குழம்பிய பண்ட்:

ஏனெனில் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்காத அவர் லக்னோ அணியில் ஓப்பனிங் முதல் 7வது இடம் வரை களமிறங்கி பார்த்து விட்டார். அதில் சென்னை அணிக்கு எதிராக 3வது இடத்தில் விளையாடிய ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்து ஓரளவு அசத்தினார். ஆனால் அந்தப் போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் மோசமாக விளையாடிய அவர் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

மொத்தத்தில் இந்த வருடம் 11 போட்டியில் விளையாடியுள்ள அவர் வெறும் 128 ரன்களை மட்டுமே எடுத்து 27 கோடிக்கு தகுந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் எங்கே களமிறங்க வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் குழப்பத்துடன் இருப்பதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். தம்மைப் பொறுத்த வரை அவர் 3வது இடத்தில் விளையாடுவதே சரியாக இருக்கும் என்று உத்தப்பா அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

உத்தப்பா அறிவுரை:

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் ஒரு பேட்ஸ்மேனாக தன்னை குழப்பத்தில் இழந்துள்ளார். பேட்டிங் பற்றிய தெளிவில் அவரிடம் மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. ஒரு போட்டியில் அவர் அப்துல் சமத்தை தம்மை விட மேலே பேட்டிங் செய்ய அனுப்பினார்”

இதையும் படிங்க: அதுல சுமாரான ரெகார்ட்டை கொண்ட ரோஹித் சர்மாவின் கேரியர் வேடிக்கையானது.. மைக்கேல் ஆதர்டன் கருத்து

“அது பேட்டிங்கில் தாம் எந்த வேலை செய்ய வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இல்லாததைக் காண்பிக்கிறது. முதலில் அவர் தன்னை சுற்றியுள்ள குழப்பங்கள் அமைதியாக விட வேண்டும். ஏனெனில் அவருக்கு தற்சமயத்தில் எதுவுமே ஒரு வேலை செய்யவில்லை. 2024 டி20 உலகக் கோப்பையில் 3வது இடத்தில் விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதுவே அவருடைய இடமாகும். இந்த ஐபிஎல் தொடரில் கூட சிஎஸ்கே அணிக்கு எதிராக அவர் 3வது இடத்தில் சிறப்பாக விளையாடினார்” என்று கூறினார்.

Advertisement