3 – 4 வருஷத்துக்கு அப்றம் அம்மாவை பெருமைப்பட வெச்சுட்டேன்.. ஃபார்முக்கு வர அதான் ஹெல்ப் பண்ணுச்சு.. ரியன் பராக்

Riyan Parag 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற 9வது லீக் போட்டியில் டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 186 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ரியான் பராக் 84* (45) ரன்கள் குவித்தார்.

பின்னர் சேசிங் செய்த டெல்லி முடித்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 173/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு ஆரம்பத்தில் டேவிட் வார்னர் அதிரடியாக 49 (34) ரன்களும் கடைசியில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 44* (23) ரன்களும் எடுத்தனர். ஆனால் அவர்களை தவிர்த்து மிட்சேல் மார்ஸ் 23, ரிக்கி புய் 0, கேப்டன் ரிஷப் பண்ட் 28, அபிஷேக் போரேல் 9, அக்சர் படேல் 15* ரன்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வி கிடைத்தது.

- Advertisement -

ஆட்டநாயகன் பராக்:
ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக சஹால் 2, நன்ரே பர்கர் 2 விக்கெட்டுகளை எடுத்து 2வது வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 84 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய ரியான் பராக் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடந்த 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து மோசமாக செயல்பட்டு வந்த அவர் கிண்டல்களுக்கு உள்ளானார்.

இருப்பினும் இந்த வருடம் பேட்டிங் வரிசையில் 4வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற அவர் முதல் போட்டியில் 43 (29) ரன்கள் அடித்து தற்போது ஆட்டநாயகன் விருது வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் ரஞ்சிக் கோப்பை போன்ற சமீபத்திய உள்ளூர் தொடரில் விளையாடி பெரிய ரன்கள் அடித்தது தான் ஃபார்முக்கு வர உதவியதாக ரியான் பராக் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அம்மா இங்கே இருக்கிறார். அவர் 3 – 4 வருடங்களாக என்னுடைய தடுமாற்றங்களை பார்த்தவர். இன்று அவர் பெருமைப்படுவார். என்னைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பது எனக்கு தெரியும். அது நான் 0 ரன்கள் எடுக்கிறேனா இல்லையா என்பதை தாண்டி எப்போதும் மாறாது. இந்த வருடம் எனக்கு எனக்கு உள்ளூர் தொடர் அபாரமானதாக அமைந்தது. அது தற்போது உதவுகிறது”

இதையும் படிங்க: 9க்கு 9 வெற்றிகள்.. டெல்லியை வீழ்த்திய ராஜஸ்தான்.. ஐபிஎல் வரலாற்றில் நிகழ்ந்த அரிதான நிகழ்வு

“சில நேரங்களில் டாப் 4 இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் 20 ஓவர்களும் விளையாட வேண்டும். பிட்ச்சில் பந்து மெதுவாக கீழே நின்று வந்தது. கடந்த போட்டியில் சஞ்சு பையா அப்படி விளையாடினார். நான் கடினமாக வேலை செய்தேன். குறிப்பாக கடந்த 3 நாட்களாக படுக்கையில் இருந்த நான் வலி நிவாரணிகளை போட்டுக்கொண்டு எழுந்து வந்தேன். அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

Advertisement