இதுக்காக ரிஷப் பண்ட்க்கு அபராதம் போடனும்.. ஆடம் கில்கிறிஸ்ட் அதிருப்தி விமர்சனம்.. காரணம் என்ன?

Adam Gilchrist 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 26வது லீக் போட்டியில் லக்னோவை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. அதனால் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த டெல்லி வெற்றிப் பாதைக்கு திரும்பி நிம்மதியடைந்துள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ ஆயுஸ் படோனி 55*, கேப்டன் கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுத்த உதவியுடன் 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த டெல்லிக்கு பிரிதிவி ஷா 32, கேப்டன் ரிசப் பண்ட் 41, ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் 55 ரன்கள் அடித்து 18.1 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் முதல் முறையாக ஒரு ஐபிஎல் போட்டியில் 160+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ பரிதாபமாக தோற்றது. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

கில்கிறிஸ்ட் விமர்சனம்:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தேவ்தூத் படிக்கலுக்கு எதிராக டெல்லியின் இசாந்த் சர்மா வீசிய ஒரு பந்தை நடுவர் ஒய்ட் என்று அறிவித்தனர். அப்போது அதற்கு எதிராக டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ரிவியூ எடுத்தார். அதை சோதித்த 3வது நடுவர் மீண்டும் ஒய்ட் வழங்கியதால் டெல்லி ஒரு ரிவ்யூவை இழந்தது.

அதனால் அதிருப்தியடைந்த ரிஷப் பண்ட் களத்தில் இருந்த நடுவருடன் 3 – 4 நிமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் ரிஷப் பண்ட் போன்ற தேவையற்ற விஷயங்களுக்காக வாக்குவாதம் செய்யும் வீரர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான அதிகாரத்தை நடுவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எந்த வகையான கிரிக்கெட்டிலும் நடுவர்கள் போட்டியை சிறப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கு இன்றிரவு மற்றொரு உதாரணத்தை நான் பார்த்தேன். அவர்கள் போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு சிறந்த வேலையை செய்ய வேண்டும். அங்கே ரிஷப் பண்ட் ரிவியூ செய்தாரா என்பதில் தகராறு ஏற்பட்டது. ரிவியூ எடுத்ததில் குழப்பம் இருந்ததால் அது பரவாயில்லை”

இதையும் படிங்க: இந்த விஷயத்தை இந்தியா மாதிரி வேறு எங்கேயும் பாத்ததில்லை.. டெல்லியின் 22 வயது ஆஸி வீரர் பேட்டி

“ஆனால் அவர்கள் அங்கேயே நின்று அதைப்பற்றி 3 – 4 நிமிடங்கள் பேசினார்கள். அது மிகவும் எளிமையான உரையாடல் என்று நான் நம்புகிறேன். ரிஷப் எவ்வளவு புகார் கொடுத்தாலும் சரி, வேறு எந்த வீரர் இது போன்ற புகாரை செய்தாலும் சரி “அது முடிந்து விட்டது” என்று நடுவர்கள் அவர்களிடம் சொல்லி விட்டு விரைவாக செல்ல வேண்டும். ஆனால் அதையும் தாண்டி வீரர்கள் தொடர்ந்து பேசினால் அபராதம் விதிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement