IPL 2023 : இந்த ஐ.பி.எல் தொடரின் ஸ்ட்ராங்கான டீம் இதுதான் – ரிக்கி பாண்டிங் வெளிப்படை

Ponting
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் நடப்பு ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்று மார்ச் 31-ஆம் தேதி துவங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

IPL-2023

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது முழு வீச்சில் தயாராகி போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இவ்வேளையில் எந்தெந்த அணி சிறப்பாக செயல்படும்? எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்? இந்த தொடரானது எப்படி அமையும் என பல்வேறு விடயங்கள் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரின் வலுவான அணி எது? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

RR

இந்த தொடரை பொருத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வலுவாக அணியாக இருப்பதாக நினைக்கிறேன். ஏனெனில் கடந்த ஆண்டு அவர்கள் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்திருந்தனர். ஆனால் தற்போது அந்த அணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக ஜோ ரூட், ஹோல்டர் போன்ற வீரர்களை அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

- Advertisement -

அதேபோன்று பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சம பலத்துடன் ராஜஸ்தான் அணி திகழ்வதால் இம்முறை அந்த அணி வலுவான அணியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு சீசனில் துவக்கம் முதல் இறுதிப் போட்டி வரை ஆதிக்கம் செலுத்துவது என்பது பெரிய விஷயம்.

இதையும் படிங்க : IPL 2023 : பும்ராவுக்கு மாற்றாக தமிழக வீரரை வாங்கிய மும்பை – ரிஷப் பண்ட்க்கு பதிலாக இளம் வீரரை வாங்கிய டெல்லி

அதனால் இந்த சீசனில் யார் கோப்பையை வெல்வார்கள் என்பது சொல்வது கடினம் என்றாலும் வலுவான அணியாக ராஜஸ்தான் அணி இருக்கும் என்பதை கூறலாம் என ரிக்கி பாண்டிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement