எங்களையே ஏமாத்த பாக்குறீங்களா.. அம்பயருடன் வாக்குவாதம் செய்த பாண்டிங் – கங்குலி.. நடந்தது என்ன?

Ponting and Ganguly
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற 9வது லீக் போட்டியில் டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. ஜெய்ப்பூரில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ரியான் பராக் 84* (45) ரன்கள் எடுத்த உதவியுடன் டெல்லி வெற்றி பெற 186 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய டெல்லிக்கு டேவிட் வார்னர் 49, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 44* ரன்கள் எடுத்ததனர். ஆனால் கேப்டன் ரிஷப் பண்ட், மிட்சேல் மார்ஷ் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் 20 ஓவரில் டெல்லியை 173/5 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றி பெற்ற ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர், சஹால் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அம்பயருடன் வாக்குவாதம்:
முன்னதாக இந்த போட்டியில் ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் போல்ட், சிம்ரோன் ஹெட்மயர் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ராஜஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் இன்னிங்ஸ் முடித்ததும் வெஸ்ட் இண்டீஸின் சிம்ரோன் ஹெட்மயருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் நன்ரே பர்கரை இம்பேக்ட் வீரராக பந்து வீசும் இன்னிங்க்ஸில் ராஜஸ்தான் பயன்படுத்தியது.

ஆனால் முதல் ஓவரின் 5வது பந்தில் முடிவில் களத்தில் இருந்த இந்திய வீரர் சுபம் துபேவுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவலை சப்ஸ்டிடியூட் வீரராக ஃபீல்டிங் செய்ய வருமாறு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அழைத்தார். அதனால் அதிருப்தியடைந்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்களா? இங்கே என்ன நடக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

குறிப்பாக பிளேயிங் லெவனில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில் இப்போது மட்டும் எப்படி 4 வெளிநாட்டு வீரர்கள் ஃபீல்டிங் செய்ய முடியும்? என்று பாண்டிங் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிப்பதற்காக 4வது அம்பையர் வேகமாக ஓடி வந்தார். அவரிடம் டெல்லி அணியின் இயக்குனர் சௌரவ் கங்குலியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு சஞ்சு சாம்சன் விதிமுறைக்கு உட்பட்டு தான் ரோவ்மன் போவலை ஃபீல்டிங் செய்ய வைத்தார் என்பதை அவர்களிடம் 4வது நடுவர் விதிமுறை தாளை காண்பித்து விளக்கினார்.

இதையும் படிங்க: 3-4 வருஷமாவே அந்த பையன் பத்தி தான் என்கிட்ட அதிகமா கேள்வி கேக்குறாங்க. வெற்றிக்கு பின்னர் – சஞ்சு சாம்சன் பேட்டி

அதாவது 1.2.6 விதிமுறைப்படி பிளேயிங் லெவனில் நான்குக்கும் குறைவான வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் வேறொரு வெளிநாட்டு வீரர் மற்றொரு எந்த வீரருக்கு பதிலாகவும் சப்ஸ்டியூட் வீரராக செயல்பட முடியும். எனவே அந்த விதிமுறைப்படி ராஜஸ்தான் அணி எந்த தவறும் செய்யவில்லை என்று 4வது நடுவர் விளக்கி விளக்கம் கொடுத்ததால் பாண்டிங் மற்றும் கங்குலி ஆகியோர் அமைதியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement