இந்தியாவை தோற்கடிக்க அந்த அணியால் மட்டுமே முடியும்.. வாசிம் அக்ரம் வித்யாசமான பாராட்டு

Wasim Akram
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் நடப்பு சாம்பியன், இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற சாம்பியன் அணிகளை தோற்கடித்த இந்தியா நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவையும் 234 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சொல்லப்போனால் நெதர்லாந்தை தவிர்த்து என்று அனைத்து போட்டிகளிலும் அசால்டாக 300 – 400 ரன்கள் குவித்து எதிரணிகளை பந்தாடி செமி ஃபைனலுக்கும் தகுதி பெற்ற தென்னாப்பிரிக்கா இப்போட்டியில் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 101*, ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் எடுத்த உதவியுடன் 327 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

மாஸ் இந்திய அணி:
அதை துரத்திய துரத்திய தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் அனல் பறந்த பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 83 ரன்ககளுக்கு சுருண்டு சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 14 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்கள் எடுத்தார்.

அந்த வகையில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் மிரட்டி வரும் இந்தியா சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதையும் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணி என்பதையும் நிரூபித்து வருவதால் இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி அனலாக செயல்பட்டு வரும் இந்தியாவை தோற்கடிப்பதற்கு உலகின் சிறந்த 11 பேரை கொண்ட கனவு உலக லெவன் அணியால் மட்டுமே முடியும் என்று வாசிம் அக்ரம் கலகலப்பாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போதைக்கு ரெஸ்ட் ஆஃப் தி வேல்ர்ட் மற்றும் இந்தியா அணிகள் மோதுவதே நியாயமாக இருக்கும். ஏனெனில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் இந்தியா நொறுக்குகிறார்கள். முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் அவர்கள் போட்டியை மொத்தமாக கட்டுப்படுத்தி வெல்கிறார்கள்”

இதையும் படிங்க: அதை யூஸ் பண்ணி இந்தியா நல்லா ஏமாத்துறாங்க.. முன்னாள் பாக் வீரர் பரபரப்பான விமர்சனம்

“இதை தவிர்த்து அவர்களுடைய செயல்பாடுகளை பற்றி நான் என்ன சொல்ல முடியும்? இப்போட்டியில் சதமடித்து தன்னை நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என்பதை நிரூபித்த விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே நம்ப முடியாத அளவுக்கு அதிரடியாக விளையாடி அனைத்து அழுத்தங்களையும் நீக்கினார். 2வது விக்கெட் விழுந்ததும் போட்டி தென்னாபிரிக்காவின் கையிலிருந்து இந்தியாவின் பக்கம் வந்தது” என்று கூறினார்.

Advertisement