மேட்ச் ஸ்டார்ட் ஆகுறதுக்கு 5 நிமிஷத்துக்கு முன்னாடி தான் எனக்கு அந்த விஷயமே தெரியும் – ரீசா ஹென்றிக்ஸ் பேட்டி

Reeza-Hendricks
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 20-ஆவது லீக் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளனர்.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது. பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா தசைப்பிடிப்பு காரணமாக விளையாட முடியாமல் போனதால் எய்டன் மார்க்ரம் கேப்டனாகவும், ரீசா ஹென்ட்ரிக்ஸ் பவுமாவிற்கு பதிலாக மாற்று துவக்க வீரராகவும் இந்த போட்டியில் களம் இறங்கினார்கள்.

அந்த வகையில் இன்றைய போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கிய ஹென்றிக்ஸ் 75 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 85 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா அணியின் ரன் குவிப்பிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் கூறுகையில் : நான் இந்த போட்டியில் விளையாடிய விதத்தை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

என்னுடைய ரன் குவிப்பை நான் துவங்கும் போது சற்று கடினமாக இருந்தாலும் இறுதியில் நல்ல இன்னிங்சை விளையாடியதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் வான்டெர் டுசனுடன் இணைந்து அமைத்த பார்ட்னர்ஷிப் எங்களது அணியின் ரன் குவிப்பிற்கு உதவியது. இந்த போட்டியில் நான் விளையாடுவேனா என்பது போட்டி ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்னரே எனக்கு தெரியவந்தது. அனைத்துமே வெகு விரைவாக நடைபெற்று முடிந்தது.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான நிலையை சந்தித்த இங்கிலாந்து அணி – நடப்பு சாம்பியனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

பவுமா விளையாடவில்லை என்று தெரிந்ததும் எனக்கான வாய்ப்பு கிடைத்ததும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் டீ காக் ஆட்டம் இழந்ததும் அடுத்த விக்கெட்டுக்காக பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் நன்றாக விளையாடியதாக உணர்கிறோம். அதேபோன்று மார்க்ரம் மற்றும் மில்லர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த வேளையில் கிளாசன் மற்றும் யான்சன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி எங்களை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றனர் என ரீசா ஹீன்ட்ரிக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement