ஏற்கனவே அவங்க இருக்குற நிலைமைக்கு இதுவேறயா? இங்கிலாந்து அணியிலிருந்து விலகிய முன்னணி வீரர் – விவரம் இதோ

Topley
- Advertisement -

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று நடப்பு சாம்பியனாக 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலககோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அடியெடுத்து வைத்தது. இம்முறையும் ஜாஸ் பட்லர் தலைமையில் அதிரடி வீரர்கள் அணியில் நிறைந்திருப்பதால் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இரண்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பலம் வாய்ந்த நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்தது அந்த அணியின் மிக மோசமான நிலையை காட்டுகிறது.

இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள நட்சத்திர வீரர்கள் பலர் பார்மில் இல்லாத காரணத்தினால் அந்த அணி தடுமாறி வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி நட்சத்திர வீரர் இங்கிலாந்து அணியிலிருந்து வெளியே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று அக்டோபர் 21-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே மைதானத்திலிருந்து வெளியேறினார். பின்னர் போட்டியின் இறுதி நேரத்தில் பந்துவீசிய அவர் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் படிங்க : மேட்ச் ஸ்டார்ட் ஆகுறதுக்கு 5 நிமிஷத்துக்கு முன்னாடி தான் எனக்கு அந்த விஷயமே தெரியும் – ரீசா ஹென்றிக்ஸ் பேட்டி

இந்நிலையில் அவரது ஸ்கேன் பரிசோதனை முடிவில் ரீஸ் டாப்லேவின் கை விரல் உடைந்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் எஞ்சியுள்ள உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக எந்த வீரர் அணிக்குள் கொண்டு வரப்படுவார் என்ற பரிசீலனையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement