RCB : போதுங்க..போதும்.. இதுக்கு மேல வெயிட் பண்ணமுடியாது. ஆர்.சி.பி அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட – 2 பயிற்சியளர்கள்

Sanjay-Bangar
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16-சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஆனால் இந்த 16 ஆண்டுகளில் ஒருமுறை கூட பெங்களூரு அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதில்லை. ஆண்டுதோறும் பலமான அணியாக பார்க்கப்படும் பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை தவறவிடும் போதும் ஆர்.சி.பி ரசிகர்கள் வருத்தமடைகிறார்கள். ஆனால் தொடர்ந்து தங்களது ஆதரவினையும் தவறாமல் வழங்கி வருகின்றனர்.

RCB

- Advertisement -

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருந்தது. அதேவேளையில் மீண்டும் ஒருமுறை ஆர்.சி.பி அணி கோப்பையை தவறவிட்டு ரசிகர்களை.ஏமாற்றியது

இன்றளவும் ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை என்றாலும் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை பெற்ற அணியாக பார்க்கப்படும் ஆர்.சி.பி அணி எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு எப்படியாவது ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதற்காக தற்போது ஒரு சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

Sanjay-Bangar Mike-Hesson

அந்த வகையில் அந்த அணியின் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் மற்றும் இயக்குனரான மைக் ஹெசன் ஆகிய இருவரும் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் இருவருக்கும் பதிலாக புதிய இயக்குனரையும், புதிய பயிற்சியாளரையும் ஆர்சிபி அணி தேட துவங்கியுள்ளது.

- Advertisement -

இந்த இரு இடங்களுக்கு முன்னாள் ஆர்.சி.பி வீரர்களான கிரிஸ் கெயில், ஏ.பி.டி வில்லியர்ஸ் ஆகியோர் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் தற்போது பெங்களூரு அணியின் கேப்டனாக இருக்கும் டூபிளெஸ்ஸிஸ் இன்னும் ஒரு வருடத்தில் 40 வயதினை எட்டிவிடுவார் என்பதனால் அவருக்கு பதிலாக கேப்டன் மாற்றமும் நடைபெற்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : 2023 உ.கோ : இந்திய ரசிகர்கள் எதிர்த்தாலும் அவங்க பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க – முன்னாள் வீரர் சர்ச்சை பேட்டி

மைக் ஹஸன் மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோரது கூட்டணியில் பெங்களூரு அணி மூன்று முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருந்தாலும் அண்மையில் நடைபெற்ற முடிந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை எனவே அடுத்த ஐபிஎல் கோப்பையை கணக்கில் வைத்து இந்த முடிவுகளை அவர்கள் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

Advertisement