அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக ஆர்.சி.பி தக்கவைக்க இருக்கும் 4 வீரர்கள் இவர்கள் தான் – லிஸ்ட் இதோ

- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எஞ்சியுள்ள தொடரானது செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் 15 வது சீசன் 10 அணிகளுடன் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது.

IPL

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த ஆண்டு அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதன் படி 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரோ அல்லது இரண்டு இந்திய வீரர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் என எப்படி வேண்டுமானாலும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது அணியில் தக்கவைக்க வேண்டிய நான்கு வீரர்கள் குறித்து முடிவு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஆர்.சி.பி அணி தக்கவைக்க நினைக்கும் 4 வீரர்கள் இந்த பதிவில் நாம் காணலாம். அதன்படி அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக சந்தேகமே இன்றி பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நம்பிக்கை நட்சத்திரமான ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் தக்க வைக்கப் படுவார்கள்.

ABD

இவர்கள் இருவரை தவிர மீதமுள்ள இரு இடத்திற்கு பலத்த போட்டி நிலவுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு ஆர்சிபி அணியில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜேமிசன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இந்திய அணியின் வீரர்களான சாகல், சிராஜ் ஆகியோர் இருக்கின்றனர். இருப்பினும் இதில் 2 வீரர்களை பெங்களூர் அணி தேர்வு செய்ய வேண்டுமெனில் நிச்சயம் மேக்ஸ்வெல்லை தக்க வைத்துக்கொள்ளும்.

Maxwell

ஏனெனில் பேட்டிங்கில் அதிரடி காட்டும் மேக்ஸ்வெல் ஒருசில ஓவர்களையும் வீசுவார். அதேபோன்று நான்காவது நபராக தேவ்தத் படிக்கல் அல்லது சாஹல் ஆகிய இருவரில் ஒருவரை தக்கவைத்துக்கொள்ளும். ஏனெனில் தொடர்ச்சியாக ஆர்சி பணிக்காக சிறப்பாக பந்துவீசி வருபவர் சாஹல் அதேபோல படிக்கல் கடந்த ஆண்டு அறிமுகமாகி இருந்தாலும் அறிமுக தொடரிலேயே 400 ரன்களை விளாசி இருந்தார். இதன் காரணமாக சாஹல் அல்லது படிக்கல் ஆகிய இருவரில் ஒருவரை பெங்களூர் அணி தக்கவைக்கும் என்று தெரிகிறது.

Advertisement