ஆர்.சி.பி அணியின் புதிய கேப்டன் யார்? இறுதி முடிவை எடுத்த நிர்வாகம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

RCB
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 26-ஆம் தேதி துவங்கும் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான அனைத்து அணிகளின் கேப்டன்களும் அறிவிக்கப்பட்ட வேளையில் இன்னும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மட்டும் தங்களது புதிய கேப்டன் யார்? என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி அந்த தொடர் முடிந்த கையோடு கேப்டன் பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் பெங்களூர் அணிக்கு புதிய கேப்டன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

RCB

- Advertisement -

இந்நிலையில் ஏற்கனவே அந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இம்முறை தக்க வைக்கப்பட்டதால் அவரே கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்கும் வேளையில் தனது திருமணத்திற்காக அவர் ஆரம்பத்தில் சில போட்டிகளில் விடுப்பு எடுத்துள்ளதால் அவர் கேப்டன் பதவியில் நியமிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.

இதன் காரணமாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் பெங்களூர் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் தென் ஆபிரிக்க முன்னாள் கேப்டன் டு பிளிசிஸ் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இப்படி ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக 3 வீரர்கள் பரிசீலிக்கப்பட்ட வேளையில் தற்போது ஆர்சிபி அணி கேப்டன் பொறுப்பிற்கான வீரரை தேர்வு செய்வதில் இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

rcb 1

மேலும் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார்? என்பதை வரும் 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அணியின் நிர்வாகம் சார்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய கேப்டன் அறிவிக்கப்படும் போது அணியின் ஜெர்சியும் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் தற்போது வரை அணி நிர்வாகம் செய்துள்ள முடிவின்படி ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக டு பிளேசிஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மிக நீண்ட அனுபவம் வாய்ந்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை வழிநடத்தி உள்ளதால் அவரே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : கபில் தேவாக உருவாக நினைத்து அஷ்வின் ஆரம்பகாலத்தில் என்ன செய்தார் தெரியுமா? – ருசிகர பின்னணி

அதோடு ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரும், சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் ஆர்சிபி அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்த தகவலும் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 15வது சீசனுக்கான முதல் போட்டியில் பெங்களூரு அணி 27-ஆம் தேதி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement