RCB vs DC : இன்றைய போட்டியில் சீருடையில் மாற்றத்துடன் களமிறங்க உள்ள பெங்களூரு அணி – காரணம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 20 ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் பெங்களூருவில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும்

Divilliers
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 20 ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் பெங்களூருவில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.

Kohli

- Advertisement -

பெங்களூரு அணி இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்து உள்ளன. அதனால் இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற உத்வேகம் காட்டும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரு அணியின் இந்த போட்டியில் உள்ள மாற்றம் குறித்து டிவில்லியர்ஸ் பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : தொடரின் ஆரம்பத்திலிருந்து ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் இருப்பது மனதிற்கு கஷ்டத்தை தருகிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணி பச்சை நிற சீருடையில் ஆடுகிறது.

Green

ஏனெனில், எப்போதெல்லாம் பெங்களூரு அணி பச்சை நிற சீருடையில் ஆடுகிறதோ அப்போதெல்லாம் பெங்களூரு வெற்றி பெரும். அதனை நம்பிக்கையாக கொண்டு ஒரு திருப்புமுனைக்காக நாங்கள் பச்சை நிற சீருடையில் விளையாட உள்ளோம்.

green 1

இன்றைய போட்டியில் வெற்றிக்கு பாதைக்கு திரும்பினால் தான் தொடரில் எங்களது இடத்தினை தக்கவைத்து கொள்ள முடியும் என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

Advertisement