சி.எஸ்.கே ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தோனியின் பிறந்தநாள் அன்று ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட வாழ்த்து – என்னனு பாருங்க

Jadeja-and-Dhoni
- Advertisement -

சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடத்த 2022-ஆம் ஆண்டு தோனிக்கு அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் சென்னை அணி அடுத்தடுத்து தோல்விகளை பெறவே மீண்டும் அந்த தொடரின் பாதியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து காயத்தை காரணம் காட்டி அணியிலிருந்து வெளியேறிய ஜடேஜா சமூக வலைதளத்தில் சிஎஸ்கே அணியை பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டார்.

இதன் காரணமாக சென்னை அணியுடன் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாக அவர் இனி சி.எஸ்.கே அணிக்காக விளையாட மாட்டார் என்று கூறப்பட்டதோடு அது குறித்த பல்வேறு விமர்சனங்களும் இணையத்தில் வைரலாகின. அதோடு கிரிக்கெட் விமர்சகர்களும் இந்த விடயத்தை மிகவும் காரசாரமாக மாற்றினர்.

- Advertisement -

ஆனால் சிஎஸ்கே அணிக்காக 2023-ஆம் ஆண்டு அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய ஜடேஜா இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதோடு வெற்றிக்கான ரன்களை அடித்த பின்னர் தோனியை கட்டி தழுவிய அவர் அவருக்காகவே இந்த கோப்பையை வென்று பரிசளித்ததாக தெரிவித்திருந்தார். என்னதான் சென்னை அணிக்கும் ஜடேஜாவுக்கும் பிரச்சனை என்று பலரும் கூறி வந்தாலும் அவர் இதுவரை சிஎஸ்கே அணியின் மீது ஈடுபாடுடன் தான் செயல்பட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக அவரது கேப்டன் தோனிக்கு அவர் எவ்வளவு உண்மையாக இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் இன்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடும் மகேந்திர சிங் தோனிக்கு உலகெங்கிலும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜடேஜா தற்போது அவரது சார்பில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இன்று வரை அவருடனே எனது பயணம் இருக்கிறது. இனியும் அது தொடரும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் “மஹி பாய்” விரைவில் மஞ்சள் நிறத்தில் சந்திப்போம் என ஜடேஜா பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : நாட்டின் பெரிய தலைவர் தலையீடு, அஃப்ரிடியை மிஞ்சி ஒரே நாளில் ஓய்வை வாபஸ் பெற்ற தமீம் இக்பால் – கலாய்க்கும் ரசிகர்கள்

இதன் மூலம் இனியும் அவர் சென்னை அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாகி சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜடேஜா அங்கு நடைபெறயிருக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அணிகளில் விளையாடயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement