சி.எஸ்.கே அணி சாம்பியன் பட்டம் வென்றதும் ஜடேஜா இன்ஸ்டாகிராமில் செய்துள்ள மாற்றம் – இனி சென்னையை விட்டு போவமாட்டாரு

Ravindra-Jadeja
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சி.எஸ்.கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா சில போட்டிகளில் செயல்பட்டார். ஆனால் சி.எஸ்.கே அணி அவரது தலைமையில் தொடர்ந்து தோல்விகளை சந்திக்க மீண்டும் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் தோனியிடமே வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஜடேஜா சி.எஸ்.கே அணியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு காயத்தை காரணம் காட்டி அந்த தொடரின் கடைசி சில போட்டிகளுக்கான அணியில் இருந்து வெளியேறினார்.

Jadeja

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு அவர் சி.எஸ்.கே அணியில் விளையாட மாட்டார் என்றும் அவர் சென்னை அணியில் இருந்து வெளியேறுவார் என்றும் விமர்சனங்கள் பரவின. ஆனால் ஜடேஜா தொடர்ந்து சி.எஸ்.கே அணிக்காகவே விளையாடி இறுதிப்போட்டியில் வெற்றியும் பெற்று 5 ஆவது முறை சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற காரணமாக திகழ்ந்தார்.

அதோடு இனிவரும் சீசன்களிலும் அவர் சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. ஜடேஜா குறித்து ஏகப்பட்ட விமர்சங்கள் வந்தும், தோனிக்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் பரவினாலும் அதெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஜடேஜா இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.

Jadeja

அதிலும் குறிப்பாக நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் அதனை வெற்றிகரமாக முடித்து கொடுத்த ஜடேஜா நேரடியாக மைதானத்தில் இருந்து தோனியை நோக்கி ஓடிச்சென்று அவருடன் வெற்றியை கொண்டாடினார்.

- Advertisement -

அதோடு தோனியும் ஜடேஜாவை ஆரத்தழுவி கட்டித்தூக்கி அவரை கொண்டாடினார். மேலும் இந்த வெற்றி தோனி ஒருவருக்காக தான் என இந்த வெற்றியையும் அவருக்கு பரிசளித்தார். இந்நிலையில் சி.எஸ்.கே அணி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படைத்தை மாற்றியுள்ளார். அதிக தோனி அவரை கட்டி தூக்கியபடி இருக்கும் படத்தை அவர் டி.பி-யாக வைத்துள்ளார். அவரது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இதையும் படிங்க : IPL 2023 : ஃபைனலில் குஜராத் தோற்க நீங்க தான் காரணம் – பாண்டியாவை விளாசும் கவாஸ்கர், சேவாக், நடந்தது என்ன?

கடந்த ஆண்டு சி.எஸ்.கே அணியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஜடேஜா தனது சமூகவலைத்தள பக்கத்தில் சென்னை அணியை பின்தொடர்வதை நிறுத்தினார். அதோடு சி.எஸ்.கே அணியுடன் இருக்கும் புகைப்படங்களை நீங்கினார். அதனால் ஜடேஜா சென்னை அணியை விட்டு வெளியேறப்போகிறார் என்று பலரும் கூறிவந்தனர். ஆனால் தற்போது ஜடேஜா தோனியுடன் சி.எஸ்.கே ஜெர்சியில் இருக்கும் புகைப்படத்தையே முகப்பு புகைப்படமாக வைத்துள்ளதால் அவர் சென்னை அணியை விட்டு வெளியேறமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement