IPL 2023 : 4 மேட்ச் கூட முழுசா விளையாடல, பேசாம என்சிவி’வில் வீடு வாங்கி குடி போயிருங்க – சிஎஸ்கே வீரரை விளாசும் சாஸ்திரி

Shastri
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து டாப் 4 இடத்தை பிடிக்க போராடி வருகிறது. அந்த அணிக்கு இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் வேகப்பந்து வீச்சு கூட்டணி ரன்களை வாரி வழங்கி வருவது பெரிய பின்னடைவாகவும் கவலையாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த வருடம் அசத்திய இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி இம்முறை காயத்தால் வெளியேறிய போதிலும் தீபக் சஹார் முதல் போட்டியிலிருந்தே விளையாடுவார் என்பது சென்னை ரசிகர்களுக்கு நிம்மதியாக அமைந்தது.

Deepak-Chahar

- Advertisement -

ஆனால் ஆரம்பத்திலேயே ரன்களை வாரி வழங்கி பின்னடைவை ஏற்படுத்திய அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் காயத்தை சந்தித்து 1 ஓவர் மட்டுமே வீசி பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில் அவருடைய காயம் சற்று அதிகமாக இருப்பதால் இன்னும் ஓரிரு வாரங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாதாக 2018 ஐபிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சென்னை 3வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய தீபக் சஹர் இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராக சாதனை படைத்து நிலையான இடத்தையும் பிடித்தார்.

சாஸ்திரி விளாசல்:
அதனால் அவரை நம்பி சென்னையும் 14 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. ஆனால் 2022 ஐபிஎல் தொடருக்கு முன் காயமடைந்து வெளியேறி தோல்விக்கு முக்கிய காரணமாகும் வகையில் அமைந்த அவர் குணமடைந்து ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் விளையாடினார். அதில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி மீண்டும் காயமடைந்து வெளியேறிய அவர் அக்டோபரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் குணமடைந்து விளையாடினார். அந்த சமயத்தில் அவரைப் போலவே காயமடைந்து குணமடைந்த பும்ரா மீண்டும் காயமடைந்து வெளியேறினார். அதனால் அவருடைய இடத்தில் தீபக் சஹர் டி20 உலக கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Deepak-Chahar

ஆனால் மீண்டும் கடைசி நேரத்தில் காயமடைந்து 2022 டி20 உலக கோப்பையிலிருந்து வெளியேறிய அவர் சுமார் 3 – 4 மாதங்கள் குணமடைந்து ஓய்வெடுத்து விளையாடிய இந்த ஐபிஎல் தொடரிலும் முழுமையாக 4 போட்டிகள் விளையாடுவதற்குள் மீண்டும் காயமடைந்துள்ளார். இதனால் ரசிகர்களைப் போலவே கடுப்பாகியுள்ள ரவி சாஸ்திரி இப்படி அடிக்கடி காயத்தை சந்தித்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நீங்கள் பேசாமல் அங்கேயே ஒரு வீடு வாங்கி குடிபெயருங்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இதை இனிமேல் இந்த வழியில் பாருங்கள். அதாவது சில வீரர்கள் என்சிஏ’வில் நிரந்தரமாக குடியிருப்பவர்களாக மாறிவிட்டார்கள். விரைவில் அவர்களுக்கு அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் உரிமை கிடைக்கப் போகிறது. அப்போது தான் அவர்களால் எந்த நேரத்திலும் அங்கு செல்ல முடியும். இவ்வாறு தொடர்ந்து நடப்பது நல்லதல்ல. இது நம்ப முடியாததாக இருக்கிறது. அதாவது நீங்கள் அதிகமான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை ஆனாலும் மீண்டும் மீண்டும் காயமடைகிறீர்கள்”

Ravi-Shastri

“குறிப்பாக முழுமையாக நீங்கள் 4 போட்டிகளில் கூட விளையாடவில்லை. பின்னர் ஏன் என்சிஏவுக்கு செல்கிறீர்கள்? அதாவது அங்கே இருந்து தான் வந்த நீங்கள் 3 போட்டிகளில் விளையாடியதும் ஏன் மீண்டும் அங்கே செல்கிறீர்கள். எனவே என்சிஏவில் அனைத்து அம்சங்களிலும் தேர்வாகி ஃபிட்டான பின் களமிறங்கி விளையாடுகிறோம் என்பதை உங்களுக்கு நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள். இது இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் பிசிசிஐ மற்றும் பல்வேறு அணிகளின் கேப்டன்களுக்கும் கடுப்பேற்றுகிறது”

இதையும் படிங்க:IPL 2023 : சொன்னதை செய்து காட்டி மும்பையை காப்பாற்றிய ஹிட்மேன் ரோஹித் சர்மா – வார்னரை மிஞ்சி சேவாக், கெயில் சாதனை சமன்

“அது மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. கடினமான காயங்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு 4 போட்டிக்கும் ஒரு முறை தசைப்பிடிப்பு காயம் ஏற்படும் போது அங்கு என்ன தான் நடக்கிறது என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் சில வீரர்கள் வேறு எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. அதாவது 3 மணி நேர போட்டியில் வெறும் 4 ஓவர்கள் வீசியதும் காயமடைகிறீர்கள் என்பது அபத்தமானது” என்று கூறினார்.

Advertisement