2024 ஐ.பி.எல் ஏலத்தில் முதல் வீரராக உலகக்கோப்பை நாயகனை தட்டி தூக்கிய சி.எஸ்.கே – எந்த வீரர் தெரியுமா?

CSK Auction
- Advertisement -

2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துபாயில் நடைபெற்றது. அதில் அனைத்து 10 அணிகளிலும் உள்ள வெறும் 77 இடங்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 33 வீரர்கள் போட்டி போட்டதால் அதிக தொகைக்கு விலை போகப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது.

அந்த சூழ்நிலையில் துவங்கிய ஏலத்தில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை அடித்து நொறுக்கி வெற்றியை பறித்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை வாங்குவதற்கு சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் கடைசியில் ஹைதராபாத் நிர்வாகம் விட்டுக் கொடுக்காமல் 6.80 கோடிக்கு போட்டி போட்டு அவரை வாங்கியது.

- Advertisement -

அசத்திய சிஎஸ்கே:
அந்த நிலைமையில் 2வது செட்டில் வந்த வீரர்களில் நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை வாங்குவதற்கு சில அணிகள் போட்டியிட்டது. ஆனால் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை 1.80 என்ற குறைந்த விலையிலேயே வளைத்து போட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 8 இன்னிங்ஸில் 523 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.

குறிப்பாக 23 வயதிலேயே இதற்கு முன் விளையாடாத இந்திய சூழ்நிலைகளில் தரமான பவுலர்களை தில்லாக எதிர்கொண்ட அவர் சிறப்பாக விளையாடியது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. அதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 23 வயதிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனையையும் ரச்சின் ரவீந்திரா முறியடித்தார்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பை வரலாற்றில் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையும் அவர் படைத்தார். அதனால் இந்த உலகக் கோப்பையில் அவர் குறைந்தது 5 முதல் 10 கோடிகளுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை நிர்வாகம் மிகவும் குறைந்த விலைக்கு வாங்கியது உண்மையாகவே பாராட்டத்தக்க முடிவு என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: உலககோப்பை நாயகனான டிராவிஸ் ஹெட்டை தட்டிதூக்கிய அணி எது? – எவ்வளவு தொகை தெரியுமா?

அதிலும் குறிப்பாக அம்பத்தி ராயுடு கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்றார். மறுபுறம் ரவீந்தரா ஓப்பனிங் மற்றும் 3வது இடத்தில் விளையாடக்கூடிய திறமையை கொண்டிருப்பதை உலகக் கோப்பையில் காண்பித்தார். எனவே 2024 ஐபிஎல் தொடரில் ராயுடுவின் இடத்தில் அவர் விளையாடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement