இரவில் வெளிச்சம் போல.. சிஎஸ்கே’வை தோற்கடிக்க அந்த ஒரு மும்பை பிளேயர் போதும்.. எச்சரித்த அஸ்வின்

Ashwin 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 28வது லீக் போட்டி நடைபெற உள்ளது. அதில் தலா 5 கோப்பைகளை வென்று சரிக்கு சமமாக ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணிகளாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் துவங்கப்பட்டது முதலே இவ்விரு அணிகளும் வெற்றியை பெறுவதற்காக பலமுறை அனல் பறக்க மோதியுள்ளன. அதனால் ஐபிஎல் வரலாற்றின் பரம எதிரிகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகள் இம்முறை எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ருதுராஜ் – ஹர்டிக் பாண்டியா தலைமையில் மோதுகின்றன.

- Advertisement -

எச்சரித்த அஸ்வின்:
வரலாற்றைப் பொறுத்த வரை சென்னைக்கு எதிராக மும்பை அதிக வெற்றிகளை பெற்று முன்னிலையில் வகிக்கிறது. எனவே இம்முறையும் சொந்த மண்ணில் சென்னையை தோற்கடித்து மும்பை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டால் ஏற்படும் இருட்டில் விளக்கை பயன்படுத்துவது போல அழுத்தமான சூழ்நிலையில் எதிரணியை வீழ்த்தும் மும்பையின் துருப்புச்சீட்டாக பும்ரா இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.

எனவே அவரைத் தாண்டி சிஎஸ்கே வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இரவில் மின்சாரம் தடைபடும் போது நாம் அவசர விளக்கை பயன்படுத்துவோம். அதே போல பும்ராவை மும்பை இந்தியன்ஸ் எமர்ஜென்சி லைட்டாக பயன்படுத்துகிறது. எனவே அவர் விக்கெட்டை எடுத்தால் அது பவர் பிளேவில் மும்பைக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக இருக்கும்”

- Advertisement -

“அதன் பின் 2வது பகுதியில் தேவைப்படும் போதோ அல்லது ரன்களை நிறுத்துவதற்கான சூழ்நிலை உருவாகும் போதோ அல்லது மற்ற பவுலர் ரன்களை வாரி வழங்கும் போதோ மும்பை அவரை எமர்ஜென்சி லைட்டாக பயன்படுத்துகிறது. கடந்த போட்டி முடிந்ததும் நான் பும்ராவிடம் பேசினேன். அப்போது வான்கடே மைதானம் பவுலர்களுக்கு போர்க்களம் போன்றது என பும்ரா என்னிடம் சொன்னார். அந்த மைதானத்தில் மும்பை அணியினர் 250 ரன்களை பயிற்சி போட்டிகளில் அசால்டாக சேசிங் செய்கின்றனர்”

இதையும் படிங்க: வெறும் 4 ரன்ஸ் தான்.. மும்பைக்கு எதிராக மைல்கல் போட்டியில் புதிய சாதனை படைக்க உள்ள தல தோனி

“எனவே அங்கு 250 ரன்களை சேசிங் செய்வது சாதாரணமானது. கடந்த போட்டியில் கூட டெல்லிக்கு எதிராக அவர்கள் 230+ ரன்கள் அடித்தனர். அதில் டெல்லி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனவே அந்த மைதானத்தைப் பற்றி இதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல பெங்களூருவுக்கு எதிரான கடந்த போட்டியில் மற்ற பவுலர்கள் தடுமாறிய போது பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்து மும்பையை வெற்றி பெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement