ரோஹித் ஆட்டமிழந்ததும் வருத்தமடைந்த மனைவி. ஆறுதல் கூறிய பிரீத்தி அஷ்வின் – நடந்தது என்ன?

Ritika
- Advertisement -

ஐபிஎல் தொடரில் நாற்பத்தி நான்காவது லீக் ஆட்டம் நேற்று மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது.

Jos Buttler vs Mi

- Advertisement -

ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 67 ரன்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 21 ரன்களும் குவித்தனர். பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 51 ரன்களையும், திலக் வர்மா 35 ரன்களையும் குவித்து அசத்தினார்கள். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் பார்ம் நேற்றும் தொடர்ந்தது என்று கூறலாம்.

Ritika 1

ஏனெனில் நேற்று துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா அஸ்வின் பந்துவீச்சில் 2 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்து வெளியேறியதும் அதனை கண்ட ரோஹித்தின் மனைவி ரித்திகா மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். இதன் காரணமாக மிகுந்த வருத்தம் அடைந்த அவரை ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரரான அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாராயணன் நேராக சென்று கட்டி அணைத்து தேற்றும் வகையில் அவருக்கு சில ஆறுதல்களை கூறினார்.

- Advertisement -

இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒன்றாக பயணித்து வரும் ரோஹித் மற்றும் அஸ்வின் ஆகியோர் மிகச்சிறந்த நண்பர்கள் என்பதும் எங்கு சென்றாலும் இந்திய அணி வீரர்கள் தங்களது குடும்பத்துடனே பயணிப்பதால் வீரர்களை தாண்டி அவர்களது குடும்பத்தினருக்கு இடையேயும் நல்ல புரிதல் உள்ளது.

இதையும் படிங்க : டி20 உ.கோ முன்னர் தெ.ஆ தொடரில் இந்த 3 இளம் புயல்களுக்கு சான்ஸ் கொடுங்க – சேவாக் அதிரடி பேட்டி

அந்த வகையில் ரோகித் சர்மாவின் மனைவி வருத்தம் அடைந்த போது அஷ்வினின் மனைவி நேராகச் சென்று அவருக்கு ஆறுதல்களை தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement