கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய ஜேசன் ராய்க்கு பதிலாக உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேன் ஒப்பந்தம் – வேறலெவல் தான்

Jason-Roy
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் இந்த 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

ஏற்கனவே இந்த 2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் நடத்தப்பட்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணி வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக சில வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சில வீரர்கள் காயம் காரணமாகவும் வெளியேறி வரும் வகையில் கொல்கத்தா அணியிலிருந்து துவக்க வீரரான ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அப்படி கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய ஜேசன் ராய்க்கு பதிலாக மாற்றுவீரரை தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சொந்த காரணங்களுக்காக வெளியேறிய ஜேசன் ராய்க்கு பதிலாக :

- Advertisement -

உலகின் நம்பர் 2 டி20 பேட்ஸ்மேனான இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பில் சால்டை கொல்கத்தா அணி ஒன்றரை கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடியிருந்த பில் சால்ட் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தவே அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையும் படிங்க : அந்த வாய்ப்பு கிடைக்காமலேயே 500 விக்கெட்ஸ் எடுத்த அஸ்வினை பாத்து கத்துக்கோங்க.. குல்தீப்புக்கு டிராவிட் அட்வைஸ்

ஐ.பி.எல் தொடரில் அவரது ஆட்டம் சுமாராக இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அடுத்தடுத்து 2 சதங்களை விளாசி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்து அணிக்காக அற்புதமாக விளையாடி வரும் வேளையில் அவரது வருகை நிச்சயம் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement