பங்களாதேஷ் அணியை வீழ்த்த இவ்ளோ ரன்னே போதும்னுதான் முடிவு பண்ணோம் – ஆட்டநாயகன் மிக்கீரென் பேட்டி

Paul-Van-Meekeren
- Advertisement -

நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது அக்டோபர் 28-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணியானது 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்களை மட்டுமே குவித்தது. நெதர்லாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்கள் குவித்தார். பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியானது எளிதில் நெதர்லாந்து அணியை வீழ்த்தும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் நெதர்லாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது நெதர்லாந்து அணி சார்பாக மிகச் சிறப்பான பதிவுவீச்சை வெளிப்படுத்திய அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான பால் வான் மெக்கீரன் 7.2 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் பால் வான் மெக்கீரென் கூறுகையில் : இந்த நாள் எங்களுக்கு மிகவும் ஒரு ஸ்பெஷலான நாளாக மாறி உள்ளது. ஏனெனில் நாங்கள் ஆரம்பத்திலேயே கூறியது போன்று நாங்கள் அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் நோக்கில் விளையாடி வருகிறோம். எனவே எங்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது முக்கியம்.

- Advertisement -

கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு பிறகு தற்போது மீண்டு வந்துள்ளது மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த போட்டியின் போது நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும் போது பாதி ஓவர்களை கடந்த பின்னர் 230 முதல் 240 ரன்கள் வரை அடித்தாலே இந்த மைதானத்தில் எதிரணியை சுருட்டி விடலாம் என்று முடிவு செய்துவிட்டோம். அந்த வகையிலேயே நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். துவக்கத்தில் ஆரியன் தத் மற்றும் வான் பீக் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசி நல்ல துவக்கத்தை தந்தனர்.

இதையும் படிங்க : ஆஸியிடம் அடி வாங்குனாலும் கம்பேக் பண்ணிட்டோம்.. எங்களோட லட்சியமே வேற.. நெதர்லாந்து கேப்டன் உற்சாக பேட்டி

அதன்பிறகு என்னாலும் சிறப்பாக பந்து வீச முடிந்தது. அதேபோன்று எங்களது அணியின் வீரர்கள் பீல்டிங்கில் கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக தனியாக நாங்கள் 20 நிமிடங்கள் பீல்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். அதுதான் போட்டியின் போதும் எங்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இந்த போட்டியில் என்னை ஆட்டநாயக்கனாக தேர்வு செய்தது ஒரு கடினமான தேர்வாகவே இருந்திருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு எங்களது அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர் என ஆட்டநாயகன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement