இந்த மாதிரி ஒரு கிளீன் ஹிட்டிங்கை இப்போதான் பாக்குறேன். வெற்றிக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் பூரிப்பு

Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் போட்டியானது அக்டோபர் 25-ஆம் தேதி இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், ஸ்காட் எட்வர்ஸ்ட் தலைமையிலான நெதர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தினர். அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்து 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பாக அதிகபட்சமாக டேவிட் வார்னர் 104 ரன்களையும், மேக்ஸ்வெல் 106 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சு சமாளிக்க முடியாமல் 21-ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களில் சுருண்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 309 வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், மிட்சல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு முழுமையான போட்டியாக இந்த போட்டியை நாங்கள் விளையாடி உள்ளதாக நினைக்கிறேன். முதலில் விளையாடி 400 ரன்களை அடித்து பின்னர் அவர்களை சுருட்டியதில் மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

மேக்ஸ்வெல்லுடன் இணைந்து விளையாடியது மிகவும் அற்புதமாக இருந்தது. நாங்கள் இருவரும் கடைசி நேரத்தில் விளையாடும்போது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்ததில் மகிழ்ச்சி. அவர் ஆடிய ஆட்டம் இன்று பிரமாதமாக இருந்தது. இதைப் போன்று கிளியரான ஒரு அதிரடி ஆட்டத்தை நான் பார்த்ததில்லை. அவர் ஆடிய ஆட்டத்தை எதிரில் நின்று பார்த்ததில் மகிழ்ச்சி. ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்தும் ரன்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பந்துவீச்சிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : கருணையின்றி நெதர்லாந்தை 90க்கு சுருட்டி ஓடவிட்ட ஆஸ்திரேலியா.. வரலாறு காணாத உலக சாதனை வெற்றி

அதிலும் குறிப்பாக ஜாம்பா ஆரம்பத்தில் சில போட்டிகளில் அதிர்ஷ்டம் இல்லாமல் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் தடுமாறினாலும் தற்போது அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். இதற்கடுத்து நாங்கள் நியூசிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலா நகரில் நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்க இருக்கிறோம். நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரில் நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருப்பதால் இனி வரும் போட்டிகளிலும் எங்கள் அணியின் வெற்றியை மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து இந்த வெற்றியை தொடருவோம் என கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement