நடப்பு ஐ.பி.எல் தொடரில் பவுலிங்கில் கலக்கும் அணி என்றால் அது இந்த அணிதான் – பார்த்திவ் படேல் வெளிப்படை

Parthiv
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியாவில் ஐபிஎல் தொடரானது நடைபெறாமல் இருந்ததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது நிச்சயம் இந்தியாவில்தான் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிசிசிஐ அதற்கான சரியான திட்டமிடுதலுடன் கூடிய அட்டவணையை வடிவமைத்து இந்த ஐபிஎல் தொடரை நடத்திவருகிறது. ஏற்கனவே இருந்த எட்டு அணிகளுடன் தற்போது லக்னோ மற்றும் குஜராத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு தற்போது புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 15வது ஐபிஎல் தொடரானது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

IPL 2022 (2)

- Advertisement -

மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது கிட்டத்தட்ட 40 போட்டிகளை நெருங்கியுள்ள இத்தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை மற்றும் சென்னை ஆகிய இரு ஜாம்பவான் அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் மற்ற அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக தற்போது நடப்பு ஐ.பி.எல் தொடரானது மேலும் சுவாரசியமான கட்டத்தினை எட்டியுள்ளது. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்தத் தொடர் குறித்த தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் வாயிலாக வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேலும் இந்த ஐபிஎல் தொடர் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Rajasthan Royals RR

அதில் அவர் நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த பவுலர்களை கொண்ட அணி எது என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நடப்பு ஐபிஎல் தொடரில் பந்து வீச்சில் முழு பலம் வாய்ந்த அணி எது என்று கேட்டால் நான் நிச்சயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தான் குறிப்பிடுவேன். ஏனெனில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி எதிரணிகளுக்கு நெருக்கடியை அளித்து வருகின்றனர்.

- Advertisement -

அதோடு வேகப்பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் சென் போன்ற வீரர்களும் அது தவிர்த்து சில வீரர்களும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் பந்துவீச்சில் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : உங்கள எவ்ளோ நம்பினோம், நீங்களே இப்படி பண்ணலாமா? ஜடேஜா மீது அதிருப்தி அடைந்த ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

இந்த தொடரில் மற்ற அணிகள் பேட்ஸ்மேன்களை வைத்து அதிகம் காட்டி வந்தாலும் ராஜஸ்தான் அணி பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றும் இந்த ஐபிஎல் தொடரில் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணி என்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement