அவரு எவ்ளோ பெரிய ஜாம்பவான்.. அவரை இப்படித்தான் ட்ரீட் பண்ணுவீங்களா? – ஹார்டிக் பாண்டியாவை எச்சரிக்கும் ரசிகர்கள்

Pandya
- Advertisement -

2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதிலிருந்தே பல்வேறு கார சாரமான சம்பவங்கள் மும்பை அணியின் மத்தியில் நிகழ்ந்து வருகிறது. அதோடு கேப்டன் ஹார்டிக் பாண்டியா ரசிகர்கள் மத்தியிலும் அதிகளவில் சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதிலும் குறிப்பாக ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனாக பாண்டியாவை கேப்டனாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

அதோடு பயிற்சி செய்யும் இடத்தில் மட்டும் இன்றி மைதானத்திலும் ரோஹித் சர்மாவிடம் ஹர்திக் பாண்டியா அவமரியாதையாக நடந்து கொள்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் ஏற்கனவே அதிக ஆட்டிட்யூட் காட்டும் பாண்டியா இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஓவராக ஆட்டிட்யூட் காண்பிக்கிறார் என்ற ஒரு கருத்தும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 2 போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருந்தாலும் பாண்டியா குறித்த சர்ச்சைகள் இன்னும் அடங்கிய பாடில்லை. அந்த வகையில் தற்போது இலங்கை அணியின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவான் பிளேயருமான லாசித் மலிங்காவை பாண்டியா அவமானப்படுத்தியதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் மும்பை அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர். அதன் காரணமாகவே இன்றளவும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் கடைசியாக நடைபெற்று முடிந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஓய்வறைக்கு திரும்பி வரும் வேளையில் பந்துவீச்சு பயிற்சியாளர் அனைவரையும் கட்டி தழுவி வரவேற்றார். அப்போது கேப்டன் பாண்டியாவிடம் சென்ற அவர் பாண்டியாவையும் கட்டி அணைக்க முயன்றார்.

இதையும் படிங்க : நான் சொல்றேன் இல்ல ரெவியூ எடுங்க.. ரிஷப் பண்டின் கையை பிடித்து கட்டாயப்படுத்திய குல்தீப் யாதவ் – நடந்தது என்ன?

அப்போது பாண்டியா தனது கைகளால் அவரை தடுத்து தள்ளிவிட்டபடி சென்றார். இதனால் சற்று அதிருப்தி அடைந்த மலிங்கா எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் அவரிடம் இருந்து விலகி சென்றார். மலிங்கா போன்ற ஒரு ஜாம்பவான் வீரரை இப்படித்தான் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதா? என்று ஹார்டிக் பாண்டியாவை தற்போது ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். அதோடு மட்டுமின்றி மிகப்பெரிய ஜாம்பவானை இப்படியா நடத்துவது என பாண்டியாவின் இந்த செயலை எச்சரிக்கும் வகையில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement