உலகக்கோப்பை அணியில் 3 முக்கிய மாற்றங்களை செய்த அணி நிர்வாகம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pak
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது 14-வது ஐபிஎல் தொடரானது நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள இந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் வரும் 17-ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடரானது அங்கு நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த தொடரானது திட்டமிட்டபடி நடைபெறும் என்று உறுதியாகி உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சரியாக நடைபெற்று வருகிறது.

cup

- Advertisement -

இந்நிலையில் உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணிகளின் வீரர்களை மாற்றம் செய்ய நாளை மட்டுமே கடைசி நாளாக கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. நாளைக்குள் அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளலாம். அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்றிருந்த பேட்ஸ்மேன் குஷ்தில் ஷா, விக்கெட் கீப்பர் அசாம் கான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹைதர் அலி, சர்பிராஸ் அகமது, பகர் சமான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

pak

ஏற்கனவே பாகிஸ்தான் அணி தேர்வு செய்யப்பட்ட பிறகு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் சற்று மனக் கசப்பில் இருந்ததாக பேசப்பட்ட வேளையில் மீண்டும் அந்த இடங்கள் சரி செய்து தற்போது மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த வருஷம் நான் ஆடுவேனான்னு தெரியல. சீனியர் வீரர் மனம்திறந்த பேட்டி – விவரம் இதோ

தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய டி20 லீக் தொடருக்கு பின்னர் அந்த செயல்பாடுகளின் அடிப்படையில் உலக கோப்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் இந்த அணியின் மாற்றம் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு மகிழ்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement