டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் மீது ரசிகர்களின் ஆர்வத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை ஆரம்பித்து அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி ஒருமுறை நியூசிலாந்து அணியிடமும், மற்றொரு முறை ஆஸ்திரேலியா அணியிடமும் தோல்வியை சந்தித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
ஆஸ்திரேலிய அணியை எங்களால் வீழ்த்த முடியும் : ஆன்ரிச் நோர்க்யா
அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் என அடுத்தடுத்த இரண்டு தோல்விகளால் இந்திய அணி இந்த வாய்ப்பை இழந்தது.
இதன் காரணமாக முதல் முறையாக இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாமல் போனது. அதேவேளையில் இந்த சுழற்சியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாட இருக்கின்றன.
எதிர்வரும் ஜூன் 11 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இவ்விரு அணிகளும் விளையாட இருக்கின்றன. இதன் காரணமாக இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த முறை ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவி கோப்பையை தவறவிட்ட வேளையில் இந்தமுறை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றுவோம் என தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஆன்ரிச் நோர்க்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : லண்டன் லார்ட்ஸ் மைதானம் எப்பொழுதுமே எங்களுக்கு சிறப்பான மைதானமாக இருந்து வந்திருக்கிறது.
இதையும் படிங்க : ரோஹித் போல ஓய்வை அறிவித்த விராட் கோலி.. அதுவரை விளையாடுமாறு பிசிசிஐ கோரிக்கை.. வெளியான தகவல்
கடந்த காலங்களில் நாங்கள் அந்த மைதானத்தில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளதால் நிச்சயம் இம்முறை ஆஸ்திரேலிய அணியை அந்த மைதானத்தில் வீழ்த்தி கோப்பையை வெல்ல மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதுமட்டுமின்றி கடந்து சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களது அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இம்முறை நாங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என ஆன்ரிச் நோர்க்யா கூறியது குறிப்பிடத்தக்கது.