ரோஹித் போல ஓய்வை அறிவித்த விராட் கோலி.. அதுவரை விளையாடுமாறு பிசிசிஐ கோரிக்கை.. வெளியான தகவல்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த 2022ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக பொறுப்பையும் ரோஹித் சர்மா ஏற்றுக்கொண்டார். அவரது தலைமையில் ஓரளவு நிலையான வெற்றிகளை பெற்ற இந்தியா கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்தது.

அந்தத் தோல்விகளுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருமே மோசமாக விளையாடியது முக்கிய காரணமானது. அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர்கள் கடந்த 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினர். அதனால் அவர்கள் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ரோஹித் போல கோலி:

இருப்பினும் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மோசமான ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மாவை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாகவே அவர் மரியாதையுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில் ரோஹித் சர்மாவை போல தாமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுகிறேன் என்று பிசிசிஐ’யிடம் விராட் கோலி சொன்னதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கையுடன் விராட் கோலி சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் தாமும் விராட் கோலியை போல சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். அதே போல தற்போது தாமும் ஓய்வு பெறுவதாக விராட் கோலி பிசிசிஐ’யிடம் சொன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

பிசிசிஐ கோரிக்கை:

இருப்பினும் ரோஹித் சர்மா அளவுக்கு விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்மில் இல்லை. அத்துடன் அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் இந்தியா மிகவும் சவாலான தொடரில் விளையாட உள்ளது. அதில் இந்திய அணிக்கு விராட் கோலி போன்ற ஒருவரின் அனுபவம் தேவை என்று பிசிசிஐ கருதுகிறது அதனால் ஓய்வு முடிவை தள்ளி போடுமாறு விராட் கோலியிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் ரத்தானதை பார்த்து சிரித்த பாகிஸ்தான் ரசிகர்கள்.. பெரிய ஆப்பை அடித்த அமீரகம்.. வெளியான தகவல்

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நகரலாம் என்று முடிவெடுத்துள்ள விராட் கோலி அது பற்றி எங்களிடம் தெரிவித்துள்ளார். அடுத்ததாக முக்கியமான இங்கிலாந்து சுற்றுப்பயணம் வர உள்ளதால் அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அவர் இன்னும் அந்த முடிவை மறுப்பரிசீலனை செய்யவில்லை” என்று கூறினார்.

Advertisement