KKR vs RCB : கடைசி 3-4 மேட்ச்சா நான் இதைத்தான் சொல்லிட்டு இருக்கேன். வெற்றி குறித்து – நிதீஷ் ராணா பேசியது என்ன?

Nithish-Rana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

RCB vs KKR

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்மாணிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே அடித்தது.

அதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில் :

RCB vs KKR

கடைசி மூன்று நான்கு போட்டிகளாக இதைத்தான் கூறி வருகிறேன். எப்பொழுதுமே ஒரு அணியாக நாம் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் முடிவு நமக்கு சாதகமாக அமையும். உங்களுடைய ஓய்வு அறையில் அனைவருமே மிகச் சிறந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினால் நிச்சயம் அது போட்டியின் போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே நாங்கள் இந்த தொடரின் ஆரம்பத்தில் அடைந்த தோல்விகளுக்கு பின்னரும் நம்பிக்கையுடன் இருந்ததால் நிச்சயம் இந்த தொடரில் மீண்டும் வரமுடியும் என்று நினைத்தேன். அந்த வகையில் அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். இந்த போட்டியில் முதலில் நாங்கள் பெரிய ஸ்கோரை அடித்து பெங்களூரு அணிக்கு அழுத்தம் கொடுக்க நினைத்தோம்.

இதையும் படிங்க : WTC Final : ஐபிஎல் தான் முக்கியம்னா அவருக்கு ஏன் சான்ஸ் கொடுக்கல – ரகானே தேர்வு பற்றி ஹர்பஜன் கருத்துக்கு ரசிகர்கள் அதிருப்தி

அந்த வகையில் 200 ரன்கள் கிடைக்க இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் அவர்களை வீழ்த்த நினைத்தோம். சுயாஸ் ஷர்மா எந்த ஒரு கட்டத்திலும் பவுலிங் செய்ய தயாராக இருக்கிறார். அதோடு அவர் இன்றைய போட்டியில் பந்துவீசிய விதம் அசத்தலாக இருந்தது என நிதீஷ் ராணா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement