GT vs KKR : குர்பாஸ், ரசல் தவிர்த்து நாங்க எல்லாருமே தப்பு பண்ணிட்டோம். தோல்விக்கு பிறகு தவறை ஒப்புக்கொண்ட – நிதீஷ் ராணா

Nithish-Rana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டி இன்று மதியம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

GT vs KKR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. கொல்கத்தாணி சார்பாக துவக்க வீரர் ரஹமனுல்லா குர்பாஸ் 81 ரன்களை குவித்து அசத்தினார்.

அதன் பிறகு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த தமிழக வீரர் விஜய் சங்கர் 51 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

GT

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது அணி பெற்ற தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் 20 முதல் 25 ரன்கள் வரை குறைவாக குவித்து விட்டோம். அதுவும் குஜராத் போன்ற மிக பலம் வாய்ந்த அணிக்கு எதிராக ரன்கள் மிகவும் அவசியமான ஒன்று.

- Advertisement -

அந்த வகையில் பேட்டிங்கில் நாங்கள் சறுக்கியதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் பாட்னர்ஷிப் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். குர்பாஸ் மற்றும் ரசல் ஆகியோரை தவிர்த்து என்னையும் சேர்த்து மிடில் ஆர்டரில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. அதுதான் நாங்கள் இந்த போட்டியில் செய்த தவறு என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : வேர்ல்டுகப் கிட்ட வரதால வேலையை காட்டுறாரா விஜய் ஷங்கர். ரசிகர்கள் கலாய்ப்பு – நல்லா விளையாடுனாலும் இப்படியா?

மிடில் ஓவர்களில் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்திருந்தால் இன்னும் நிறைய ரன்கள் கிடைத்திருக்கும் இது போன்ற சில தவறுகளை நாங்கள் இந்த போட்டியில் செய்து விட்டோம். இனிவரும் போட்டிகளில் இந்த தவறுகளை திருத்திக் கொண்டு நல்ல நிலையில் திரும்புவோம் என்று நிதீஷ் ராணா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement