IND vs WI : இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாங்க செய்யப்போறது இதுமட்டும் தான் – பூரான் எச்சரிக்கை

Pooran
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, விராட் கோலி ஆகியவருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட வேளையில் ரோகித் சர்மாவும் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு அமையப்போகும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் எழுந்துள்ளது.

INDvsWI

- Advertisement -

அதே வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்த பிறகு ஒரு மிகப்பெரிய சரிவிற்கு பின்னர் மீண்டும் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல ஒரு அணியாக திகழ்ந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடர் எவ்வாறு அமையப்போகும் என்பது குறித்து பேசியுள்ள பூரான் கூறுகையில் : நாங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் நல்ல மனநிலையுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். எனவே இனிவரும் போட்டிகளில் நல்ல அணியை கட்டமைத்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம்.

indvswi

அந்த வகையில் இங்கிலாந்து மண்ணிலேயே அவர்களை வீழ்த்திய பலம் வாய்ந்த இந்திய அணியை இம்முறை நாங்கள் எதிர்க்க ஆவலோடு காத்திருக்கிறோம். இந்த தொடரின் முடிவுகள் குறித்து நாங்கள் எதையும் யோசிக்க போவதில்லை. ஆனால் எங்களுடைய இலக்கு எல்லாம் இந்திய அணிக்கு எதிராக கடுமையான போட்டியை அளிக்கும் விதமாகவும், சிறப்பான ஒரு கிரிக்கெட்டை விளையாடும் விதமாகவும் நாங்கள் செயல்பட இருக்கிறோம்.

- Advertisement -

எனவே நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக மிக சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களை வீழ்த்த முயற்சிப்போம் என்று பூரான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே வேளையில் மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தவான் தலைமையிலான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இல்லை என்றாலும் இந்திய அணியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளப்போவது கிடையாது. இந்திய அணியின் வலிமை அனைவருக்கும் தெரியும்.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் ஓய்வுபெற இந்தியா தான் காரணமாம் – அவரே கூறியுள்ள பின்னணி இதோ

இருப்பினும் நாங்கள் கட்டாயம் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்த முயற்சிப்போம். தற்போது நான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவதை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகிறேன். அதுமட்டும் இன்றி பகுதி நேரமாக பந்துவீசி வருகிறேன். எனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி என நிக்கோலஸ் பூரான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement