அவங்கள லேசா விட்டது தப்பு தான்.. ஓவர்நைட்ல நாங்க மோசமாகிடல.. தோல்விக்கு பின் டாம் லாதம் வருத்தம்

Tom Latham 2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 1ஆம் தேதி புனே நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 357/4 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் சதமடித்து 114, வேன் டெர் டுஷன் சதமடித்து 133 ரன்கள் எடுத்த நிலையில் சுமாராக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 358 ரன்கள் துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 2, ரச்சின் ரவீந்தரா 9, வில் எங் 33, டார்ல் மிட்சேல் 24, கேப்டன் டாம் லாதம் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

மோசமான அணியல்ல:
அதனால் கடைசியில் கிளன் பிலிப்ஸ் 60 ரன்கள் எடுத்து போராடியும் 35.3 ஓவரிலேயே நியூசிலாந்தை 167 ரன்களுக்கு சுருட்டி வென்ற தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 6வது வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிக்கா புள்ளி பட்டியலில் இந்தியாவின் முந்தி முதலிடம் பிடித்துள்ளது. மறுபுறம் 3வது தோல்வியை பதிவு செய்த நியூசிலாந்து 4வது இடத்துக்கு சரிந்து எஞ்சிய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் டீ காக் – டுஷன் ஆகியோர் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க விட்டு தென்னாப்பிரிக்காவை 330 ரன்கள் கட்டுப்படுத்த தவறியது தங்களுடைய தோல்விக்கு காரணமானதாக நியூஸிலாந்து கேப்டன் டாம் லாதம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் ஒரே நாள் இரவில் தங்களுடைய அணி மோசமாகிவிடவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எங்களுடைய சிறந்த செயல்பாடுகள் இல்லை. டீ காக் – டுஷன் பார்ட்னர்ஷிப்க்கு பின் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். அது மிகப்பெரிய இலக்கு. அதை துரத்திய நாங்கள் சில பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். அந்த இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இருப்பினும் நாங்கள் அவர்களை 330 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்”

இதையும் படிங்க: இன்னும் கன்பார்ம் ஆகல.. கன்பார்ம் ஆனதும் செலிப்ரேட் பண்ணிக்கிறோம் – தெ.ஆ கேப்டன் தெம்பா பவுமா பேட்டி

“மைதானம் சிறியதாகவும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்ததால் முதல் 10 ஓவர்களில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் அவர்கள் ஆரம்பத்திலேயே நல்ல நிலையை எட்டிய நிலையில் எங்களால் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போனது ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் நாங்கள் சில காயங்களையும் சந்தித்தோம். இருப்பினும் இதிலிருந்து விரைவாக வெளிவந்து பெங்களூருவில் நடைபெறும் அடுத்த போட்டியில் விளையாட தயாராகிறோம். இப்போதும் நாங்கள் ஒரே நாள் இரவில் மோசமாக அணியாகிவிடவில்லை” என்று கூறினார்.

Advertisement